Wednesday, December 4, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வெள்ளித் தொழிற்பயிற்சி



இருகால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியான சுந்தரராஜன் சேலத்தில் வெள்ளித்தொழில் செய்து வருகின்றார். இவர் மாற்றுத்திறனாளிகள், தன்னம்பிக்கையுடன் வாழும் பொருட்டு இலவசமாக, வெள்ளித்தொழில் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார்.

வெள்ளித்தொழில் முழுமையாய் கற்று தேர்ச்சி பெற, குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி தேவை. ஊக்கமுடையவர்கள் இன்னும் விரைவாகவும் கற்றுத் தேர்ச்சிப் பெறலாம். பயிற்சி காலத்தில் பணிக்கேற்றபடி கூலியும் கிடைக்கும். தகுதி நல்ல நிலையில் செயல்படக்கூடிய கைகளும்,கூர்மையான பார்வையும் உடைய மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பயிற்சி பெற இயலும்.

பயிற்சி பெற விரும்புபவர்கள், தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதிகளை அவர்களே செய்துக் கொள்ள வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அவரை தொடர்புக்கொண்டு பயன் பெறலாம்.

தொடர்புக்கு: 96299 72438

பாறைகளையும் உடைத்து முளைக்கும் விதைகள்.


பொது நூலக துறையில் முதன் முறையாக இளநிலை உதவியாளராக பார்வையற்றவர் நியமனம்

கோவை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, பார்வையற்ற வாலிபர், பொது நூலகத் துறையில், இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர், முத்து வெங்கட சுப்பிரமணியம், 21. பார்வையற்ற இவர், 2012, ஜூலை, 13ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, கோவை மாவட்ட மைய நூலக அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக, அக்., 17ம் தேதி பணியில் சேர்ந்தார்.

வரலாற்றில், இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ள, முத்து வெங்கட சுப்பிரமணியம் கூறியதாவது:

அரசுத் துறையில், பணியில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என் தந்தை காலமாகி விட்டார். அதனால், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். பத்திரிகைகளை தினமும், பிறர் உதவியுடன் வாசிப்பேன். அதுவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், வெற்றி பெற உதவியாக இருந்தது.

பார்வையில்லை என்பதால் சிரமப்பட்டு இருக்கிறேன் என்பது உண்மை. ஆனால், இதுவரை வருத்தப்பட்டதில்லை. என்னை போன்றவர்கள் வீட்டில் முடங்கி விடாமல், கல்வி என்ற ஆயுதத்தை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன் கூறியதாவது:

முத்து வெங்கட சுப்பிரமணியத்திற்கு தற்போது, சீல் வைப்பது, படிவங்களை ஒருங்கிணைத்து கட்டுவது போன்ற சிறு சிறு வேலைகள் கொடுக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கென, பிரத்யேக நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த நூலகத்தில், விரைவில் இவர் பணி அமர்த்தப்படுவார்.

பொது நூலகத் துறையில், பார்வையில்லாத ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது மாநிலத்தில் இதுவே, முதன்முறை.
இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.
 — with Dhavappudhalvan Badrinarayanan A M.

உன்னாலும் முடியும்...

Saturday, November 30, 2013

அசத்தலான கண்டுபிடிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மிதி வண்டிக்கு, சூரிய மின்சாரத்தில் இயங்கும் படியாக அமைந்திருந்த கண்டு பிடிப்பு. மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்களை அரசு உத்தரவு படி, இலவசமாக  பெற தகுதியில்லா, ஆனால்  கையால் பெடல் சுற்றி இயக்கும் மூன்று சக்கர இலவச சைக்கிளைப் பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, சிரமத்தைக் குறைக்கும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் முறையில் மாற்றியமைத்து வழங்கினால், பேருதவியாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் அவர்கள், இதை சிந்தனையில் இருத்தி, சூரிய சக்தியால் இயங்கும் வகையில் மூன்று சக்கர சைக்கிள்களை மாற்றி,  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவு இட வேண்டுமாய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 


Friday, November 29, 2013

கண்ட கனவு சாதனையாய்.





அமெரிக்கா சான்பிரன்சிஸ்கோ நகரை சேர்ந்த மைல்ஸ் ஸ்காட் என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனுக்கு, காமிக் ஹீரோவான 'பாட்மான்" 'BATMAN' உடன் சேர்ந்து 'கோத்தம்' நகரை காக்கும் இலட்சிய கனவு. 

அக்கனவையும் நிறைவேற்ற முன்வந்தது ஒரு அமெரிக்கத் தொண்டு நிறுவனம். அதற்காக, சேவகர்கள் பலர் தேவைப்பட்டதால், தனது இணையதளத்தில்  தகவல் வெளியிட்டது. எந்த ஒரு பண எதிர்ப்பார்ப்புமின்றி தாமாக முன்வந்து 10,000க்கும் மேற்பட்டோர், கலந்து கொள்ள முன் வந்தனர்.

'கோத்தம்'காக்குமிலட்சிய கனவை, நவம்பர் 15ம் தேதி  சான்பிரன்சிஸ்கோவை கற்பனை நகராக மாற்றி, பேட் மான்' உடையணிந்த ஒரு நடிகருடன், 'மைல்ஸ்'  சும் "பேட் மொபைல் " என்ற வாகனத்தில் சென்று சாகசங்களை நிகழ்த்தினான்.

"சபாஷ், மைல்ஸ். அப்படிதான் கோத்தம் நகரைக் காக்க வேண்டும்" என்று   அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, 'வைட் ஹவுஸ் இன்' என்ற டிவிட்டர் மூலம் பாராட்டுகளைப் பகிர்ந்துக் கொண்டார். 

நாமும் பிரார்த்திப்போம் 'மைல்ஸ் ஸ்காட், விரைவில் புற்றுநோயிலிருந்து விடுப்பட்டு, சாதனைக்குரியவனாய் திகழ. 

Thursday, November 28, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றையோருக்கும் கொல்கத்தா ரயில்வேயில் வேலை



வேலை: 1) கோல்கத்த ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல் போர்ட்டர்,
                2) கலாசி 

பணியிடங்கள் : மொத்தம் 2,830. இதில் 3% அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு.                                            ஏறக்குறைய, சுமார் 84 பணியிடங்கள்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ.

வயது வரம்பு: 18 லிருந்து 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசின்                                 வயது வரம்பு சலுகையும் பின்பற்றபடும்.
விண்ணப்பிக்கும் முறை: 1) கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் ரூபாய் 100/=க்கு  வரைவோலை (D.D ) இணைக்க வேண்டும். பிற்படுத்தபட்டோர் / ஊனமுற்றோருக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு ) கட்டண விலக்கும்  உண்டு.

2) சுயகையோப்பமிட்ட உரிய சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும் 

அனுப்ப வேண்டிய முகவரியும், உரையின் மேல் குறிப்பிட வேண்டியதும்:


Application for Recruitment in Pay Band-I Rs.5,200-20,200/ - with GP 
Rs.1,800/- Eastern Railway

Senior Personnel Officer (Recruitment),
Railway Recruitment Cell,
Eastern Railway,
56, C.R.Avenue,
RITES Building,
1st Floor,
KOLKATA - 700 012

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2013க்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.rrcer.com 




Monday, November 25, 2013

உழைப்பின் மேன்மை.

இதை உழைப்பின் மேன்மை என்று கூறுவதா? இந்த நிலையிலும் உழைத்துதான் சாப்பிட வேண்டும் என்ற நிலைக்கு வருந்துவதா? எதுவாக இருப்பினும் ஒரு கால் இழந்த நிலையிலும், கடின வேலையில் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் இப்பெரியவரை வாழ்த்துவோம்.
  சுரண்டிப் பிழைப்பவர்களுக்கும்,  சோம்பித் திரிபவர்களுக்கும், இவரைப் போன்றவர்கள்  கொடுக்கும் சாட்டையடி. மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டும், தன்னம்பிக்கை ஊட்டும் விடிவெள்ளிகள்.

Wednesday, October 30, 2013

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை.



மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு, திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான விண்ணப்பிக்கும் காலம் கடந்து விட்டபடியால், அடுத்த 2014ம் ஆண்டு உயர்கல்வி பயலுபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவையான விபரங்கள் கீழே.

1) பிளஸ்2 பொது தேர்வில்,  1,200 மதிப்பென்களுக்கு 955 மதிப்பென்களுக்கு          மேல் பெற்றிருக்க வேண்டும்.

2) பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் 6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க                    வேண்டும்.

3) தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வேறு கல்வி உதவித்தொகைகள்  பெறக்கூடாது.

4) இத்திட்டத்தின் கீழ், தமிழக மாணவர்கள்  4,883 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் பெண்களுக்கும், மூன்று சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

5) தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படும். ஆகவே தேசியமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கை துவக்கி, கணக்கு எண்,வங்கியின் பெயர், முகவரி, மாணவ, மாணவியரின் இ-மெயில் முகவரி, ஆதார் எண் (இல்லாதவர்கள், கீழ் காணும் விலாசத்தில் விசாரித்துக் கொள்ளவும்.) தொலைபேசி எண் முதலியவற்றை, தெரிவிக்க வேண்டும்.

6) மாற்றுத்திறனாளியாக இருப்பின், அதற்குரிய படிவத்தை, உரிய மருத்துவ அதிகாரியிடம் பெற்று அனுப்ப வேண்டும். 

7) சான்றொப்பமிட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேற்காணும் அனைத்து தகுதிகளும் பெற்றிருப்பின், அம்மாணவர்கள்,    கீழ்காணும் இணையதளங்களில் உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் ( டவுண்லோடு) செய்து, அப்படிவத்தை பூர்த்தி செய்து, மேற்காணும் சான்றுகளை இணைத்து ,

 "இயக்குனர், 
கல்லூரி கல்வி இயக்ககம்,
ஈ.வே.கி.சம்பத் மாளிகை,
9வது தளம், 
சென்னை- 600 006" 

என்ற முகவரிக்கு 2014ல் தேர்ச்சி பெரும் பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 


இணையதள முகவரிகள்:


 

**    தேவையானவர்கள், இத்தகவலை பத்திரபடுத்திக் கொள்ளவும்.  

Thursday, October 24, 2013

விழியற்றவரும் நெசவு செய்ய கைத்தறி.



பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நெசவு செய்ய கைத்தறியைக் கண்டு பிடித்துள்ளார், கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரில் பேராசிரியராக பணியாற்றும், பேராசிரியர் ராஜ்குமார் ரங்கநாதன்.

மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் என்ற இடத்தில் 'கிராமின் சராசிக் பிரதிஸ்தான்' என்ற அமைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, நெசவு நெய்யும் பயிற்சி அளிப்பதுடன்,வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. 

இங்கு 40க்கும்  மேற்பட்ட  பார்வையற்ற இளைஞர்கள், பழைய சேலைகளை 4 செ.மீ.,    அளவுக்கு ரிப்பனாக வெட்டி, கைப்பின்னல் முறையில் கையாலேயே தரைவிரிப்பு தயாரிக்கும் வேலை செய்கின்றனர். கைப்பின்னல் என்பதால், ஒரு நாளைக்கு,இரண்டு தரைவிரிப்புகளை தயாரித்து, 70 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டி, வறுமையில் வாடினர்.


அவர்களின் வறுமையைப் போக்க நினைத்த தொண்டு நிறுவனம், "ரூட் டேக்" என்னும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், கிராமிய தொழில் மேன்பாட்டுக் குழுவிடம் பார்வையற்றவர்கள், எளிதில் பயன்படுத்தி, தரை விரிப்பை தயாரிக்கும் விதத்தில், புதிய கைத்தறி இயந்திரத்தை கண்டு பிடித்து தர கேட்டுக் கொண்டனர்.

  கிராமிய தொழில் மேன்பாட்டுக் குழுவின் அறிவுறுத்தல் படி, சாதாரணமாக இருக்கும் கைத்தறியின் வடிவமைப்பை சற்று மாற்றி, எடை அதிகமுள்ள பகுதியின் எடையையும் குறைத்து, பார்வையற்றவர்கள் இயக்கம் வகையில் மாற்றியதுடன், பார்வையற்ற நேசவாலரை அழைத்து, எந்த சிரமமும் இல்லாமல் தறியை இயக்க முடிகிறதாவென சோத்தித்து, தேவைக்கேற்ப மேலும் மாற்றி இலகுவாக இயக்கும் வகையில்  தயாரித்துள்ளார்.


இவர் கண்டுபிடித்துள்ள கைத்தறியின் மூலம், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஆறு தரைவிரிப்புகளை தயாரிக்கலாம். அதனால் 70 ரூபாய் வருமானம் ஈட்டியவர்கள், இனி 250 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இப்பொழுது, அங்கு பணியாற்றும் அனைத்து பார்வையற்ற நெசவாளர்களுக்கும், கைத்தறி இயந்திரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

பார்வையற்றவர்களுக்கான கைத்தரியைக் கண்டுபிடித்துள்ள பேராசிரியர் ராஜ்குமார் ரங்கநாதன் அவர்களை நாமும் பாராட்டுவோம். அவரின் கண்டுபிடிப்பை வெளியிட்டு சிறப்பித்த புதியதலைமுறை இதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வோம். 

  

Wednesday, October 16, 2013

ஒரு வேளை சாப்பாட்டுக்கே

ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல், நடையாக நடந்து மயங்கி விழுந்து கிடக்கும்போது, யாரோ ஒரு வழிபோக்கன் மூலமாக ஒரு வாய் சாப்பாடு கிடைத்து. உயிர்பெற்று, உணர்வு பெற்றவர். இன்று இந்தியாவின் முக்கியமான V I P களின் சுப நிகழ்ச்சிகளின் கேட்டரிங் பொருப்பாளர். கோடிகளில் பட்ஜெட். எப்படி முடிந்தது. ஒரு சாதனையாளரின் வியத்தகு முன்னேற்றம்.. வெற்றி!
இந்த மாத படி நிகழ்வில் வரும் 20-ம் தேதி மாலை 5.30 மணிக்கு டிஸ்கவரியில்


Saturday, October 12, 2013

நல்வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும்,
சரஸ்வதி  பூசை,
ஆயுத பூசை
திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Friday, October 4, 2013

இலவச உதடு அறுவை சிகிச்சை (ஆபரேசன்)



உதடு மற்றும் வாய் பகுதியை ஒட்டிய பிளவுடன் தமிழ்நாட்டில், மாவட்டத்திற்கு 30 குழந்தைகள் வீதம் 1000 குழந்தைகளுக்கு , சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் , கல்வித்துறை சார்பில் இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூலமாகவும் பிறவகைகளிலும் இக்குறைப்பாடுள்ள குழந்தைகளைக் கண்டறியப் பட்டு, அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணியை மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்  மேற்கொள்கிறது

 தனியார் மருத்துவமனையில் ரூபாய் 50000/= செலவு ஆகக்கூடிய  உதட்டு பிளவு அறுவை சிகிச்சை, இலவசமாக செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கான செலவை, அமெரிக்காவில் உள்ள 'ஸ்மைல்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்குகிறது.

இப்புதிய திட்டத்தின் செயல்பாடு குறித்து, ராமசந்திரா மருத்துவமனை வளாகத்தில் , 3/10/2013 அன்று நடைப்பெற்றது. இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 66 சிறப்பு ஆசிரியர்கள், மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சா ர்பில் 160 ஆசிரியர்களும் பங்கேற்றனர். வகுப்புகளில் இது குறித்த செய்தியை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், நாமும் நமக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து பயனடைய செய்வோம்.

Sunday, September 22, 2013

மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும்




சேலம் உருக்காலையின், சமுக பொறுப்பு திட்ட முன் முயற்சி சார்பிலும், சேலம் சோனா தொழில் நுட்ப கல்லூரி சமுக பொறுப்பு திட்ட முன் முயற்சி சார்பிலும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் ஆயத்த ஆடை தையற் பயிற்சி சேலம் சோனா தொழில் நுட்ப கல்லூரி சமுக பொறுப்பு திட்ட முன் முயற்சி மையத்தில் நடைப் பெற்று வருகிறது. இதுவரை 430 பெண்களுக்கு ஆயத்த ஆடை தையற் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதில் 30 மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் அடங்குவர். இவர்களில் 80% சதவீதம் பேர் ஆயத்த ஆடைத தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.

சேலம் உருக்காலையின், சமுக பொறுப்பு திட்ட நிர்வாகிகளுக்கும், சேலம் சோனா தொழில் நுட்ப கல்லூரி சமுக பொறுப்பு திட்ட நிர்வாகிகளுக்கும், அவர்களின் சமுக சேவை விரிவடைய வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.



 
 
 
 
 
 

Saturday, September 21, 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை



 ஒரு மாற்றுத்திறனாளியும், நல்ல உடல்நிலையுடன் உள்ள ஒருவரும்   திருமணம் புரிந்துக் கொண்டால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாயு, 4 கிராம் தங்கமும்,  திருமண  உதவித் தொகையாக, தமிழக அரசால்  வழங்கப்படுகிறது.  

ஆனால் இரு மாற்றுத்திறனாளிகள் இனைந்து திருமணம் புரிந்துக் கொண்டால், அவர்களுக்கு அதேதோகை என்பது ஒப்புமையற்றதாகவே கருத வேண்டியுள்ளது. சார்ந்து வாழும் நிலை மற்றவர்களை விட கூடுதலாக இருப்பதை அனைவரும் உணர்வர். ஆகவே தமிழக அரசு  இதை கவனத்தில் கொண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், வாழ்வாதாரத்தை திடப்படுத்தும் விதமாகவும், அரசால் வழங்கப்படும் திருமண உதவித் தொகையை இரட்டிப்பாக உயர்த்தி தர ஆணையிட வேண்டுமென அனைத்து தமிழக மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 

இணைப்பு: திட்டம்

உத்தரவு ஒப்பீட்டுக்கான இணைய இணைப்பு முகவரி.
http://www.thoothukudi.tn.nic.in/tamil/ddawo.html



இ.ஒரு கை அல்லது ஒரு கால், அல்லது இரண்டு அவயவங்களும் முழுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ.25,000- மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல் இருவருக்கும் இதுவே முதல் திருமணமாக இருக்க வேண்டும்.  21 வயது நிரம்பியவராய் இருக்க வேண்டும் ரூ.12,500 ரொக்கமாகவும், ரூ.12,500 சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் (மாற்றுத்திறனாளி திருமண உதவித்தொகை)
ஈ. மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் செய்யம் நபருக்கு ரூ.25,000- மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல் இருவருக்கும் இதுவே முதல் திருமணமாக இருக்க வேண்டும்.  21 வயது நிரம்பியவராய் இருக்க வேண்டும் ரூ.12,500 ரொக்கமாகவும், ரூ.12,500 சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் (மாற்றத்திறனாளி திருமண உதவித்தொகை)

Monday, September 16, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு - சேலம் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு - சேலம் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி

உடற்குறை மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்காக மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 14/9/13 சனிக்கிழமை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவை சேலம் மாவட்ட மாற்றுத்திறன் படைத்தோர் நல்வாழ்வு சங்க தலைவரும், எமது நண்பருமான அத்தியண்ணா துவைக்கி வைத்தார்.

1) கை, கால் ஊனமுற்றோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல்,

2) மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்.

3) பார்வையற்றோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல். டென்னிஸ் பந்து எறிதல்.

4) காது கேளாதோருக்கு = 100மீ, 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல். ஈட்டி எறிதல்.
போன்ற போட்டிகளில் 130 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். மாலையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வரவேற்க, பிரகாசம் வெற்றிப்பெற்றவர்களுக்கு சேலம் சென்ட்ரல் இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவர் கல்பனா இன்பராஜ் பரிசுகள் வழங்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நடராஜன், சேலம் ஜேசிஐ நாச்சிமுத்து ராஜா, விஜயகுமார் மற்றும் பலர் பங்கேற்க, சேலம் ஜிம்னாஸ்டிக் பயிற்றுனர் ஜெயமோகன் நன்றி கூறினார்.

வெற்றிப் பெற்றவர்களை ஊக்குவிக்க வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

Monday, September 9, 2013

ஸ்ரீ கஜமுகன் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்









குள்ள குள்ளனே !
குண்டு வயிறனே !!
வெள்ளைக் கொம்பனே !!!
வெள்ளை விநாயகனை தொழுதிடுவோமே.

ஸ்ரீ கஜமுகன் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

Saturday, August 24, 2013

கால்நடை மருத்துவ கல்லூரி சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்




தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையில், கால்நடை மருத்துவ அறிவியல், மீன்வள அறிவியல், உணவுத்தொழில் நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் 360 இடங்களில் 6 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டள்ளதில்,

நேற்று  சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைப்பெற்ற சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான 6 இட ஒதுக்கீட்டில் 3 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறப்பு பிரிவனருக்கான இடங்கள் முழுமையாக பூர்த்தியாகி உள்ளது. காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 3 இடங்கள் பொதுபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

நமது எண்ணங்கள்:

1) மாற்றுத்திறனாளிகளுக்கான சதவீதபடி குறைந்தபட்சம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்ட 6 இடங்களிலேயே 3 இடங்கள் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பது, வருத்தத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உரியது.

2) சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கிற்கு மொத்தம் 84 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டும் 42 பேர் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். இதில் எத்தனை மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு, எத்தனை பேர் கலந்துக் கொண்டனர் என்ற விபரம் இல்லை.

3) போட்டிகள் நிறைந்த இந்நிலையில் இருக்கின்ற, கிடைக்கின்ற வாய்ப்புகளை, நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள்  தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமென்பதையும் மனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.

4) சிறப்பு பிரிவனருக்கான கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ள அழைப்பு கிடைத்தும், கலந்துக் கொள்ளாத மாற்றுத்திறனாளிகளும்,  கவுன்சலிங்கில் கலந்துக் கொண்டும் தேர்ச்சி பெறாத,தேர்ச்சி பெறாததற்கான காரணம் அறியாத மாற்றுத்திறனாளிகளும், நமது தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தைத் தொடர்புக் கொண்டு தெரிவித்தால் உங்களும், மற்ற மாற்றுத்திறனாளிகளும் உபயோகமாக இருக்கும்.

Tuesday, August 20, 2013

வெற்றிக்கு தேவை அதிக பயிற்சியும் முனைப்பும் .







கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில், மாற்றுத் திறனாளிகளுக்கான உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் சார்பில் சரத் கயாக்வத் என்ற ஒரே ஒரு மாற்றுத் திறனாளி நீச்சல் வீரர் கலந்துக் கொண்டார்.

இவர் 200 மீ, தனி நபர் 'மெட்லே' (10வது இடம் ),  100 மீ., 'பிரஸ்ட்ஸ்டிரோக்' ( 7 வது இடம் ),    100 மீ., 'பட்டர்ஃபிளை' மற்றும் 50 மீ., ஃபிரீஸ்டைல்  ( 14 வது இடம் ) பிடித்தார்.
ஆனால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட    50 மீ., ஃபிரீஸ்டைல் ஃபைனலில் 14 வது இடம் பிடித்தது எமாற்றத்திற்குறியதாக  நாளிதழில் செய்தி வந்துள்ளது.

மேலும் சிறப்பான பயிற்சி எடுத்து வெற்றி மேல் வெற்றியடைய மாற்றுத் திறனாளி நீச்சல் வீரரான "சரத் கயாக்வத்"தை வாழ்த்துவோம்.

*நீச்சலில் விருப்பமுள்ள திறமையான மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, சிறப்பன பயிற்சியளிக்க இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை வேண்டும். ஒரு நபர் என்பதிலிருந்து திறமையான பல மாற்றுத் திறனாளி வீரர்கள் என்ற நிலை உருவாகும்.

Friday, August 9, 2013

தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மல்டிமீடியா பயிற்சி.





1) கை,கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள்
100 நபர்களுக்கு ஒரு மாத மல்டிமீடியா பயிற்சியும்,
100 நபர்களுக்கு ஒரு மாத டிஜிட்டல் ஃபோட்டோகிராபி பயிற்ச்சியும்
இலவசமாக,தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால், சென்னையில் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 21 இலட்ச ரூபாய் ஒதுக்கி உத்தரவு இட்டுள்ளார்.

2) பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதியும், பயிற்சி உதவி தொகையாக ரூபாய் 1000/= வழங்கப்படும்.

3) பயிற்சியில் சேர தகுதி :

1) கை,கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள்
2) 16 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

4) தேவையான சான்று :
1) குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2) கல்வி தகுதி சான்று நகல்.
3) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்.
4) பெயர், முகவரி, தொலைபேசி எண், கல்வித்தகுதி, மாற்றுத்திறன் தன்மை, சதவித அளவு மற்றும் விடுதி தேவையா என்ற விபரங்களை தெளிவாக எழுதி மேற்காணும் சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

5) அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகர்களுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
6) கடைசி நாள்: இம்மாதம் (ஆகஸ்ட் ) 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

** குறுகிய காலமே இருப்பதால் இச்செய்தியை வாசித்ததும், மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் சென்று சேர உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
உங்கள்
-தவப்புதல்வன்.

Wednesday, August 7, 2013

சாதனைகள் பல - எம். பிரகாஷ் மும்பை







 
 
போலியோவால் பாதிக்கப்பட்டவர்
அரபிக் கடலில் 42 கிமீ தூரம் நீந்தி சாதனை செய்ய காத்திருக்கும் தமிழர்

மும்பையின் ஒர்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் எம். பிரகாஷ் (35) என்ற தமிழர், மார்ச் 8ம் தேதி அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார். கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து ராய்கட் மாவட்டம் ரேவாஸ் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரம் நீந்தி பிறகு அங்கிந்து திரும்புவார். இந்த 42 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரத்தில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். பிரகாஷ் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பாதிக்கப் பட்டவர்.

எனினும் தனது அயராத முயற்சியால் பல சாதனைகளை செய்துள்ளார். நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 81 தங்கம், 29 வெள்ளி மற்றும் 27 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, மும்பை-ரேவாஸ்-மும்பை ஸ்விம்மதான் போட்டியில் கலந்து கொண்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். ஒர்லி, மோதிலால் நகரில் உள்ள மதராஸ்வாடியில் பிறந்த பிரகாஷ், அங்கேயே வசித்து வருகிறார். அந்த பகுதியில் அரபி கடலில் கடக்கும் ஒரு சாக்கடை நீரில்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் நீச்சலை அவர் கற்றுக் கொண்டார்.

பின்னர் உள்ளூரில் நடந்த நீச்சல் போட்டி ஒன்றில் அவர் பங்கேற்றார். அதை நேரில் பார்த்த மூத்த போலீஸ் அதிகாரியான பாலாசாகேப் காட்கே (தற்போது உதவி போலீஸ் கமிஷனராக இருக்கிறார்) பிரகாசிடம் மறைந்து கிடக்கும் திறமையை கண்டு ஆச்சரியமடைந்தார். ஒர்லி, போலீஸ் முகாமில் உள்ள நீச்சல் குளத்தில் பிரகாஷுக்கு முறைப்படியான நீச்சல் பயிற்சி அளிக்க அவர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

தனது நீச்சல் திறமைக்கும், நீச்சல் போட்டிகளில் இத்தனை பதக்கங்கள் கிடைத்ததற்கும் போலீஸ் அதிகாரி காட்கேதான் காரணம் என்று பிரகாஷ் நன்றியுடன் குறிப்பிட்டார். மேலும் வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச பெண்கள் தினம் என்பதால் அந்த நாளில் இந்த உலக சாதனையை நிகழ்த்தி அதை தன் தாயார் எம்.பாலசுந்தரிக்கு அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பிரகாஷ் கடந்த 18 ஆண்டுகளாக நீச்சலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சுவாபிமான் சங்கட்டணா தலைவர் நிதேஷ் ராணே மற்றும் வருமான வரி கமிஷனர் வி.மகாலிங்கம் ஆகியோர் கொடுத்த ஊக்கம் காரணமாகவே வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைக்க உள்ளார்.

பிரகாஷுக்கு சத்யா என்ற மனைவி, 6 வயதில் ஹரிஹரன் என்ற மகன் மற்றும் 4 வயதில் வர்ஷினி என்ற மகள் உள்ளனர். நமது நாட்டில் கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகளுக்கு அவ்வளவாக ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்பது பிரிகாஷின் ஆதங்கம். அவர் இது பற்றி கூறுகையில், “கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகளுக்கு அதிகாரிகள் ஊக்கம் அளிப்பதில்லை. இது ஏன் என்று தெரியவில்லை.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் ஆண், பெண் உட்பட 2.20 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு வாயளவில் அனுதாபம் தெரிவிப்பதற்கு பதிலாக சிறிது ஆதரவு கொடுத்தாலே மிகப்பெரிய சாதனைகளை செய்து காட்டுவார்கள்என்றார்.
 
https://www.facebook.com/photo.php?fbid=553138558059099&set=a.198320656874226.47263.100000888786399&type=1&theater
 
Thanks to: 
 
 

Tuesday, August 6, 2013

தயிரோ... தயிர். - மருத்துவக்குறிப்பு



புரதம், கால்சியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, ரிபொஃப்ளோவின்  விட்டமின் பி2, கொழுப்பு சத்து பல சத்துக்கள் தயிரில் உள்ளன. 100 மில்லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது.
ஒல்லியாக இருப்பவர்கள்,நுரையிரல் பிரச்சனை உள்ளவர்கள் நிச்சியம் தயிர் சாப்பிட வேண்டும்.மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், பிரயாணி போன்ற உணவை சாப்பிடும்போதும் தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது.ஏனெனில், இவை உணவை செரிக்கக் கூடிய பாக்டீரியாக்களை உருவாக்குகின்றன. அதனால் தான் தமிழர்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர்.

எடை அதிகரிக்க விரும்புபவர்கள் தயிரில் சர்க்கரை சேர்த்து லஸ்ஸி போல் சாப்பிடலாம். இரவில்  தயிர் சாப்பிட்டால், உடனடியாக தூங்க செல்லாமல், 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின் தான் தூங்க செல்ல வேண்டும். உடல் பருமன் உள்ளவர்கச்ளும், சர்க்கரை நோயாளிகளும் அதிகமாக தயிர் சேர்த்துக் கொள்ளகூடாது.

100 மில்லி மோரில் வெறும் 15 கலோரி தான் கிடைக்கிறது. ஆனால் இதில் நிறைய சத்துக்கள் இருப்பச்தால், எல்லோரும் மோர் அருந்த வேண்டியது அவசியம். எந்த நோயால் பாதிக்கப்பட்டிரிந்தாலும் மோர் குடிக்கலாம். தினமும் மோர் குடிப்பது உடலுக்கு நல்லது. பெப்டிக் அல்சர் வராமல் தடுக்க, பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க தினமும் மோர் அருந்துவது அவசியம். அதிக எடையால் பாதிக்க பட்டவர்கள்  அதிக அளவு மோர் குடிக்க வேண்டும். மோர் வெப்பத்தை தணிக்கும். சளி பிடித்திருப்பவர்கள் மோரை *மிதமாக சுட செய்து குடிக்கலாம்.

**மோருடன் இஞ்சி, வெந்தியம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றையும் சேர்த்து அருந்துவது இன்னும் நல்லது.

நலமுடன் இருப்போம்.
நண்பருடன் அரட்டை அடிக்க.

இனிய நல்நாள் வாழ்த்துக்கள் நட்புகளே!

நன்றி: டயடீசியன் ஷீலா


Saturday, August 3, 2013

பாவம், எந்த வரமோ?





https://www.facebook.com/photo.php?fbid=150500498471777&set=a.147672358754591.1073741829.100005354820032&type=1&theater


The parents can't afford it so CNN and Facebook are agreeing to pay half the expenses for the family and the kid so please dont ignore and help and spread the word
1 Like = 20$
1 comment = 50$
1 share = 100$

Friday, August 2, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்கும் முகாம்



விபத்தினால் கால்களை இழந்த மற்றும் போலியோவினால் நடக்க இயலாத குழந்தைகலுக்கு செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்க 10/08/2013 சனிக்கிழமை அன்று சென்னையில் அண்ணாநகரில் உள்ள அகவாழ் அறக்கட்டளை சார்பில் முகாம் நடைபெற உள்ளது. அன்று அளவேடுக்கப்படும் தகதியுள்ள 50 பேர்களுக்கு, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் செயற்கை கால்கள் மற்றும் காலிபர் வழங்ப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
ஏ.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட், AC -124, சாந்தி காலனி மெயின் ரோட், அண்ணாநகர் சென்னை- 600 040.
தொலைபேசி:- 044-26264661,
கைப்பேசி: 98400 66111, 99414 66478.

A.C.Agarwal Charitable Trust, AC - 124, Santhi Colony Main Road, Anna Nagar, Chennai - 600 040.
Phone:- 044-26264661,
Cell: 98400 66111, 99414 66478.

Thursday, August 1, 2013

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா? - மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு தகவல்



 1)   அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2881 முதுகலை ஆசிரிய பணியிடங்களுக்காக,சென்ற ஜூலை மாதம் 21ம்  தேதி நடைப்பெற்ற,  ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி. ) ல் 1.67 இலட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 8526 பேர். இவர்களில் பார்வையிழந்தோர் 971 பேர்.

2) ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி. )   ஆகஸ்ட் மாதம் வருகின்ற 17ந் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு 2,68,160 பெரும், 18ந்  தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வை 4,11,634 பெரும் எழுத உள்ளனர்.

3) டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4க்கான தேர்வு, 
கீழ்காணும் 5566 பணியிடங்களுக்கா, ஆகஸ்ட் மாதம் வருகின்ற 25ம் தேதியில், தேர்வு நடைப்பெற உள்ளது.

1) Junior Assistant (Non-Security) - இளநிலை உதவியாளர் (உத்தரவாத தொகை தேவையற்ற பணி)
2) Junior Assistant (Security) - இளநிலை உதவியாளர் (உத்தரவாத தொகை தேவை )
3) Bill Collector, Grade-I -
பில் கலெக்டர், தரம்- 1
4) Typist                  -
தட்டச்சர்,              
5) Steno-Typist, Grade – III -  சுருக்கெழுத்தாளர்-தட்டச்சர், தரம் - III
6) Field Surveyor -  புல அளவையாளர்
7) Draftsman -  வரைவாளர்

**இதில் நமது கோரிக்கை என்னவென்றால்,

1) இந்த பணி  இடங்களுக்கு தேர்ச்சி, மதிப்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 3% அளவையும் முழுமையாக நியமிக்கப்பட்ட விவரத்தையும் வெளிப்படையாக, தெளிவாக வெளியிட பட வேண்டும். உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், காது கேளாதோருக்கென  தலா  1% உள்ளது மாற்றுத் திறனாளிகளில் ஒரு பிரிவினருக்கான பணி இடம் காலியாக / தகுதியானவர் இல்லாது இருப்பின், மாற்றுத் திறனாளிகளில் உள்ள மற்றொரு பிரிவினருக்கு ஒதுக்க வேண்டுமே தவிர பொது பிரிவினருக்கோ மற்ற வகையிலோ பணிக்கான வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. 

2) பணி ஒதுக்கீட்டில் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் நல்ல உடல்நிலையுடன் இருப்பவர் தனக்கு வசதியான இடங்களைப் பெற்றபிறகு, வாழ்வே போராட்டமாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களுக்கு சிரமம் அளிக்கக்கூடிய இடங்கள்தான் மிஞ்சும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?

Monday, July 22, 2013

இதோ மற்றொரு சாட்சியம்: முயன்றால் முடியாதது இல்லை.


தந்தையின் உழைப்பில் தனயனின் வெற்றி இருவரின் முகத்திலும் வெற்றியின் பிரகாசம்!





https://www.facebook.com/photo.php?fbid=535571336491989&set=a.524514704264319.1073741838.317683321614126&type=1&theater

Sunday, July 21, 2013

காமராஜர் நினைவை போற்றி செயலாற்றுவோம்.

நினைவை போற்றி செயலாற்றுவோம்.


நாளைக்கு முகநூல் பக்கம் வரமுடியாது . காமராஜரின் பிறந்தநாள் என்று நமக்கெலாம் தெரியும். காலா காந்தி என்று அறியப்பட்ட பெருமனிதர் அவர்.

சங்கரர்,பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னைப்பாசத்தை துறந்தவர் அவர். அம்மா அருகில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே அண்ட விடவில்லை அவர். விதிகளை மீறி அம்மாவுக்கு குழாய் இணைப்பு கொடுத்த பொழுது,அதைத்தானே பிடுங்கி எறிந்து விட்டு ,"நான் பணம் கட்டி அனுமதி கேட்டேனே ? இதற்கு வரி கட்ட எனக்கு எங்க வக்கு இருக்கு?"என்று கேட்டார் அவர்

ராஜாஜியின் ஆட்சி குலக்கல்வி முறையை கொண்டு வர முயன்றதால் கவிழ்ந்த பின்பு தமிழகத்தின் முதல்வர் ஆன காமராஜர் அப்படியே அந்த அமைச்சரவையை வைத்துக்கொண்டார். பிள்ளைகள் பள்ளிக்கு சோறு போட்டால் வருவார்கள் என்று தெரிந்ததும் பிச்சை எடுத்தாவது அரசு பிள்ளைகளை படிக்க வைக்கும் என்றார்

யாரைப்பற்றியும் மேடையில் அவச்சொல் சொல்லி பேச விடமாட்டார். அவரின் கரங்கள் அப்படி பேசுபவரை செல்லமாக பதம் பார்க்கும். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் கட்சிக்கு இடம் வாங்க அதையும் கொடுத்து விட்டவர். அதிகபட்ச அவரின் ஆடம்பரம் உணவில் முட்டை

பொய்யான ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது வைத்த பொழுது ,"எனக்கு யானைக்கால் வியாதி அப்படின்னு அவனவன் சொன்னா நான் என் காலை தூக்கியா காமிச்சுக்கிட்டு இருக்க முடியும்னேன்!" என்று சொன்னவர். சட்டசபையில் எப்படி கச்சிதமாக பேச வேண்டும் என்று திமுகவுக்கு பாடம் எடுத்தவர் அவர். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி கதை அவரில் இருந்தே துவங்குகிறது

காமராஜர் தோற்ற பொழுது எதிர்கட்சிகளின் மீது பழி போடவில்லை . "இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' "என்றவர். அப்பொழுது திமுகவினர் "கல்லூரி மாணவன் சீனுவாசனிடம் படிக்காத காமராஜர் தோற்றுப்போனார் "என்று போஸ்டர் அடித்தார்கள். பெரியார்,"படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனுவாசன் வென்றார் !" என்று பதில் போஸ்டர் ஒட்டினார் 


இறந்த பொழுது பத்து செட் கதர் சட்டைகள்,சில நூறு ரூபாய்கள் அவ்வளவு தான் அவரிடம் இருந்தது என்று நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அரசாங்க பணத்தை விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதரின் கொஞ்ச நஞ்ச நினைவுகளாது அறம் சார்ந்த அரசியலை ஞாபகப்படுத்தட்டும்
 

சிந்திக்க தெரிந்தவனுக்கு....



Thanks to:  Jahir Husain

வலிக்காமல் வாழ்க்கை இல்லை.

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை..

இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா ? - காமராஜர்




சம்பவம் 1

காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .

சம்பவம் 2

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் ... காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று .

அப்பொழுது நேரு சொன்னார் ; " காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது " ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .

சம்பவம் 3

தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :

" அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் """"" என்றார் .....

சம்பவம் 4

காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க ... அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார் ...
 

Friday, July 19, 2013

கிடப்பில் தமிழக நதிநீர் இணைப்பு திட்டங்கள்....




பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி இந்த தமிழக நதிகளை உடனே இணைப்பதற்காக, 3 திட்டங்கன் தயாரித்துக் கொடுக்கப்பட்டு, ஏழு வருடங்கள் முடியப் போகிறது. ஒவ்வொரு முறையும் வறட்சிக் காலங்களில் அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும்  மல்லுக்கட்டிக் கொண்டும், உச்ச நீதி மன்றத் தீர்ப்பை எதிர் நோக்கிக் கொண்டும், அதற்கான திருப்பி பெறமுடியாத செலவீனங்களும்  நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கான மதிப்பீடும் உயர்வதுமாகத்தான் உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும், அல்லல் படும் மக்களின் போராட்டங்களும் தற்காலிக சமாதானங்களும் தான் நிலைத்திருக்கிறதே தவிர, வாழ்வாதாரங்களுக்கான செயல்களை செயல்படுத்த, ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஏனோ நினைவுக்கே வருவதில்லை. 

ஒரு பக்கம் நகரங்கள் விரிவடைவதால், அருகிலுள்ள விளைநிலங்கள் அழிந்து மனைகளாகின்றன. தமிழகத்தின் பெருபாலான நிலங்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், விவசாய வளர்ச்சியும் இல்லை. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய தடையாகவும் அமையும். வீணாக கடலில் கலக்கும் நீரை, தடுப்பணைகள், ஏரிகள், குளங்களில் சேமித்தும், கால்வாய்கள் மூலமாக நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தினால் விவசாயச்மும் செழிக்கும், நிலத்தடிநீர் பெருகி குடிநீர் பற்றாக்குறையும் மறையும்.

உடனடியாக தாமதமில்லாமல் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க திட்டத்தை துவக்கி செயல்படுத்தினாலே தமிழகம் சிறப்பாக தானே முன்னேறும். ஓட்டுவங்கியை மனத்தில் கொண்டு இலவசங்களை அளிப்பதை விட, இதுபோன்ற செயல்களுக்கு அந்த நிதியை திருப்பலாம். அதேபோல முழுத்திட்டத்தையும் செயல்படுத்தியப் பிறகுதான் நீர் திறக்கப்படும் என்ற நிலையை தளர்த்தி, இலகவான  பகுதியைகளை விரைவாக முடித்து, தாமதம் செய்யாமல் அவ்வப்போதே நீரை செலுத்தி பயன்பாட்டுக்கு அனுமதித்து விட்டால், இலவசத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட வருத்தத்தை மக்களும் உணர்ந்து மறந்து விடுவார்கள். இப்போது கிடைக்கும் ஓட்டை விட, அதிகமான ஆதரவு கிடைக்குமே தவிர குறையாது என்பது நிச்சியம்.

மத்தியில் கூட்டணி அட்சி, மாநிலங்களின் விருப்பு வெறுப்புகள் பொறுப்பற்ற தனங்கள் இப்படி பல்வேறு காரணங்களால் தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பிலேயே உள்ளது. என்று அது நடைமுறைக்கு வருமென்று கூறவேயியலாத நிலை.   அதுவரை பொருத்திருந்தோமானால் தமிழகம் நாடாக இருக்காது சுடுகாடாக மாறிவிடும். அதனால் இப்பொழுது நீர் குறைவினால் படும் பாட்டிலிருந்து, பாடம் கற்றவர்களாய், தமிழகத்தைக் காக்க, முதலில் தமிழக நதிகளை இணைப்போம். என்றாவது ஒரு நாள் தேசிய நதிநீர் இணைப்பு செயல்பாட்டிற்கு வந்தால், அன்று பக்கத்து மாநிலங்களிலிருந்து நீரை பெற குறைந்த தூரம் வாய்க்கால்கள், கால்வாய்கள் வெட்டி இணைப்பு பெற்று விடலாம்.

இதை இன்றைய அரசு நினைவிற்க் கொள்ளுமா? உணருமா? செயல்படுத்துமா? நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை துவக்கி விட்டால், மத்திய அரசு நிதியையும் பெறலாம், மக்களிடமிருந்து திருப்பி அளிக்கக்கூடிய வைப்பு நிதிகளையும் பெறலாம்.

ஒருவனுக்கு இலவசமாக உணவு அளிப்பதை விட, அவன் உழைத்து சம்பாரிக்க (வருமானமீட்ட) வாய்ப்பு அமைத்துக் கொடுத்தால், அவன் குடும்பமே செழிப்புறும் என்பதை என்று புரிந்து கொள்வார்களோ?


#‎இந்த‬ இணைப்பில் உள்ள படம் ஒரு மாதிரிக்காக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பார்வைக்காக இந்த இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
http://www.skyscrapercity.com/showthread.php?t=1437161

Thursday, July 11, 2013

என்ன கொடுமையடா! எப்போது உணர்ந்து திருந்துவார்களோ!!

பரிதவித்த மாற்றுத்திறனாளிகள்!

தேசிய மாற்றுத்திறனாளர் அட்டையில் டாக்டர்களின் கையெழுத்து பெறுவதற்காக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூகநலத்துறை அலுவலகத்தில், சென்ற செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1.30 வரை எந்த மருத்துவர்களும் வரவில்லை. மதியமும் ஆகிவிட்டதால், மாற்றுத்திறனாளி குழந்தைகளும், மற்றவர்களும் பசியுடன் காத்துக் கொண்டிருந்தும், அது குறித்து  சமூகநலத்துறை அலுவலர்களும் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. 

செய்தி அறிந்து பத்திரிக்கை நிருபர்கள் சென்று விசாரிக்க ஆரம்பித்ததும், அவசர அவசரமாக, டாக்டர்களை வரவழைத்து, மருத்துவ சான்று அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். - செய்தி

# என்ன  கொடுமையடா! எப்போது உணர்ந்து திருந்துவார்களோ!!





முயன்றால் முடியாதது இல்லை.



Amazing Things in the World

 https://www.facebook.com/photo.php?fbid=531311973589188&set=a.342434892476898.89335.338077742912613&type=1&theater

Tuesday, July 9, 2013

டாக்டர்களுக்கு கட்டாய உத்தரவு.






மாற்றுத்திறனாளிகள், ரயில் பயண சலுகைப் பெற, அரசு டாக்டர் சான்று அளிப்பது கட்டாயம். இந்த சான்றை வழங்க ரயில்வே துறை விதித்துள்ள விதிமுறைகளை, சில அரசு டாக்டர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்வதாக புகார் எழுந்ததை முன்னிட்டு, புதிய வழிகாட்டுதல் உத்தரவை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.அதில்,...

"அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று வைத்திருக்கும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு டாக்டர்கள் மறுக்காமல் ரயில் பயண சான்று வழங்க வேண்டும்  சான்று அளிக்கும் படிவத்தில் டாக்டரின் பதிவு எண்ணுடன் கூடிய முத்திரை, பணிப்புரியும் அரசு மருத்துவமனையின் முத்திரை, ஆகியவற்றை தெளிவாக தெரியும் படி முத்திரையிட்டு கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது." இது அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும் தெரியபடுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

கண்களை கொடுத்து உதவுங்கள் - Pls Donate Eyes- After Llife

2 min video to make you think for a lifetime
Length: 1:39
 
உன்னத கண்களை
உயிரோட்டமாக நிலைதிருக்க
உதவுங்கள் கொடுத்து
உயிர் பிரிந்த பிறகு.
https://www.facebook.com/dhavappudhalvan.badrinarayananan/posts/608688575837455