Monday, September 16, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு - சேலம் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு - சேலம் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி

உடற்குறை மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்காக மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 14/9/13 சனிக்கிழமை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவை சேலம் மாவட்ட மாற்றுத்திறன் படைத்தோர் நல்வாழ்வு சங்க தலைவரும், எமது நண்பருமான அத்தியண்ணா துவைக்கி வைத்தார்.

1) கை, கால் ஊனமுற்றோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல்,

2) மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்.

3) பார்வையற்றோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல். டென்னிஸ் பந்து எறிதல்.

4) காது கேளாதோருக்கு = 100மீ, 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல். ஈட்டி எறிதல்.
போன்ற போட்டிகளில் 130 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். மாலையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வரவேற்க, பிரகாசம் வெற்றிப்பெற்றவர்களுக்கு சேலம் சென்ட்ரல் இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவர் கல்பனா இன்பராஜ் பரிசுகள் வழங்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நடராஜன், சேலம் ஜேசிஐ நாச்சிமுத்து ராஜா, விஜயகுமார் மற்றும் பலர் பங்கேற்க, சேலம் ஜிம்னாஸ்டிக் பயிற்றுனர் ஜெயமோகன் நன்றி கூறினார்.

வெற்றிப் பெற்றவர்களை ஊக்குவிக்க வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

No comments: