Friday, March 17, 2017

வங்கி கடன் பெறுவது எப்படி?

இன்றொரு தகவல் - வங்கி கடன் பெறுவது எப்படி?

Yalini Sree:
 தொழில் தொடங்க கடன் எந்த வங்கியில் கிடைக்கும்?

Dhavappudhalvan Badri Narayanan A M:
1) கிராம, நகர கூட்டுறவு வங்கிகள், தேசியயுமையாக்கப்பட்ட வங்கிகள், சிட்கோ எனப்படும் சிறுத்தொழில் வளர்ச்சி வங்கி, டிக் எனப்படும் மாவட்ட தொழில் வளர்ச்சி வங்கி, கிராம விவசாய கடன் வங்கி மற்றும் பல தனியார் வங்கிகளும் கடன்கள் வழங்குகின்றன.

கேட்கப்படாத கேள்விகளுக்கு சில விளக்கங்கள்:

1) முதலில் என்ன தொழில் தொடங்கப்போகிறோமென முடிவு வேண்டும்.

2) அதற்கான முதலீடு எவ்வளவு தீர்மானிக்க வேண்டும்.

3) தொழிலறிவுக்கான சான்று. அதாவது படிப்பு அல்லது அனுபவம். அதற்கான சான்று. பெட்டிக்கடை வைக்க இது தேவையில்லை.

4) ரூபாய் 20,000/= ( இருப்பாதாயிரம் ) வரை ஜாமீனோ, முன்வைப்பு தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு நாம் கடனுக்கு அணுகும் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு ( நிபந்தனைகளுக்கு ) உட்பட்டு நடக்க வேண்டும்.

5) பெட்டிக்கடைக்கு, பொதுவிடமெனில், அரசு அனுமதியும், வாடகையிடமெனில் வாடகை ஒப்பந்த சான்றும் இருக்க வேண்டும். சிறு சுயத்தொழில் வீட்டிலேயே எனில் சொந்த வீடாக இருந்தால் வீட்டு வரி சான்றும், வாடகை வீடெனில் வாடகை சான்றுடன், உரிமையாளர் ஒப்புதல் சான்றும் தேவைப்படும். சிறு தொழிலெனில் அரசு ஒப்புதல் சான்றுடன், வாடகை இடமெனில் வாடகை சான்றுடன், உரிமையாளர் ஒப்புதல் சான்றும் தேவைப்படும்.

6) ரூபாய் 20,000/= ( இருப்பாதாயிரம் ) க்கு மேற்பட்ட தொகையெனில் குறைந்தபட்சம் 15% சதவிகிதம் நாம் முதலீடு செய்ய வேண்டும்.

7) சில தொழில்களுக்கு தேவையான கடன் தொகையை சில வங்கிகளில் பிரித்து வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். உதாரணமாக தொழில் உபகரணங்களுக்கு ஒரு வங்கியிலும், மூலப்பொருட்களுக்கு ஒரு வங்கியிலும் வேறு சில நிகழ்வுகளுக்கு மற்றொரு வங்கியிலும் கடன் பெற வேண்டியிருக்கும்.

8) எத்தனை வங்கிகளில் கடன் பெற்றாலும் அந்தந்த வங்கிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் முன் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

9) வங்கிகளின் கடன் தவணைகளை குறிப்பிடும் தேதிகளில் தவறாமல் செலுத்தி வந்தால் அபராத வட்டிகளை தவிற்கவியலும். சலுகைகளிருப்பின் அனுபவிக்கயியலும்.

10) எக்காரணத்தைக் கொண்டும் கடன் தள்ளுபடியாகும் என எதிர்பார்ப்பதும், செலுத்தாமலிருப்பதும் தவறான வழக்கமாகும். உங்களிடம் கடன் வாங்கியவர் கொடுக்காமலிருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதுபோல் தானே வங்கி கடன்களும்.

11) தொடங்கவிருக்கும் தொழில் வாங்கி விற்பது என்பதாயின் கடன் பெற்ற நாளிலிருந்து வட்டி கணக்கிடப்படுவதுடன் தவணைகள் குறிப்பிடும் காலத்திற்கு செலுத்த வேண்டிய நிலை ஆரம்பமாகிவிடும்.

12) உற்பத்தி சார்ந்த தொழிலானால் தொழில் தொடங்க குறிப்பிட்ட காலத்திற்கு பின் கடன் தவணை செலுத்த வாய்ப்பு கிடைக்கும். கடன் தொகையும் தேவைக்கேற்ப அவ்வப்போது வழங்குவார்கள்.

13) அரசுகளின் கடன் மானியம் இருப்பின் வங்கி கடன் கணக்கு முடியும் சமயத்தில் தான் சரி செய்து கடன் கணக்கை முடிப்பார்கள். மானியத்திற்கு வட்டி கணக்கிட மாட்டார்கள்.

14) ஆரம்பத்தில் கடன் தவணையை முழுமையயாக செலுத்தயியலாவிடின் கூட, கட்டக்கூடிய தொகையை தவனைத் தேதி தவறாமல் செலுத்துவதுடன், தொழில் வளர்ச்சி அடைய அடைய கடன் தவணையை கூடுதலாக செலுத்தி கடன் அடைத்து வந்தால், அத்தொழிலை விரிவுபடுத்த முற்படும்போது, முன் கடன் கொடுத்த வங்கியிலேயே இலகுவாக (ஈசியாக) கூடுதல் கடன் பெறவியலும். நீங்கள் தொழிலிலும், வாழ்விலும் உயர்வடையாவுமியியலும். வேறு வங்கிகளில் கடன் பெற அணுகினால், அத்தொழிலுக்கு கடனில்லா சான்று கேட்பர்.
உ-ம்: எமது மாற்றுத்திறனாளி நண்பரொருவர், மாற்றுத்திறனாளிகளுக்கான பூட்ஸ் கேளிப்பர்களை பழுது நீக்கும் ( ரிப்பேர் செய்யும் ) தொழில் தொடங்க, வெறும் 2000/- ரூபாய்கள் கடன் பெற்று தொழில் தொடங்கியவர், கடனை நேர்மையாக திருப்பி செலுத்தியதால், சிறிது சிறிதாக அவர் தொழில் விரிவு படுத்தி முன்னேற அவ்வங்கியே பல லட்சங்கள் கடன் கொடுத்துதவ தானாக முன்வந்தது.
அதே போல ஒரு வயது முதிர்ந்த பெண்மணி ( பாட்டி ) ஒரு வங்கிக்கு முன் தரை விரிப்பு விரித்து பழங்களை விற்பனை செய்து வந்தார். அவர் 5 ரூபாய்,10 ரூபாயென வங்கியில் சேர்த்து வந்தார். திடிரென ஒரு நாள் குடும்பத்திற்கும், கடைக்கும் பணம் தேவைப்பட, வங்கியில் சிறிய கடன் வாங்கியவர் கடன் தவனையை சரியான தேதியில், வங்கி துவங்கியதுமே முதல் நபராய் வந்து செலுத்தி விட்டு செல்வார். அவர் வந்தாலே தேதியின்னதென்று வங்கி பணியாளர்களே கூறி சிறப்பிக்கும் அளவிற்கு நடந்துக் கொண்டார். நாமும் அப்படியே நடப்போமென உறுதி கொண்டு செயல்படுவோம்தானே நண்பர்களே..

15) மாற்றுத்திறனாளிகளுக்கு சில தொழில்களில் கூடுதல் அரசு மானியமும் உண்டு. அதை விசாரித்தறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாரும் தானக வந்து சொல்லமாட்டார்கள்.

16) குறைந்த அளவு கடனெனில் வங்கியில் நம் பெயரில் சிறு சேமிப்பு கணக்கும் ( எஸ்.பி அக்கௌண்ட்- S.B A/c), பெரிய கடன்களுக்கு நடப்பு கணக்கு எனப்படும் கரண்ட் அக்கௌணட் ( Current A/c ) இருக்க அல்லது துவக்க வேண்டும். வங்கி கணக்குகள் துவக்கவும், வங்கிகளுக்கேற்ப நிரந்திர முன் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

#வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் ஏதேனும் குறைகளோ, விடுபடுதல்களோ இருப்பின், அதை அறிந்து, திருத்திக் கொள்ளும் பொருட்டும், தெளிவு படுத்தவும் அனுபவ மற்றும் துறை சார்ந்த நண்பர்களும் கருத்திட்டு உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

--
என்றென்றும் மாற்றுத்திறனாளர் நலனில்,
மாற்றுத்திறனாளர் நண்பன்
A.M.பத்ரி நாராயணன்.
@ தவப்புதல்வன்.

Monday, February 29, 2016

மாணவர்களுக்கு அரியதோர் வாய்ப்பு.




10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கும், 

அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்வான தகவல். நமது பிரதமர் 

நரேந்திர மோடி அவர்கள் ‘’அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் 

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப் ) திட்டம் 

அறிமுகப்படுத்தியுள்ளார்.


அதன்படி, 10ம் வகுப்பு தேர்வில் 75%  சதவீதத்திற்கு அதிகமான 

மதிப்பெண்கள் பெறுகின்றவர்களுக்கு ரூபாய் 10,000/மும்,

+2 தேர்வில் 85%  சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்கள் 

பெறுகின்றவர்களுக்கு ரூபாய் 25000/மும் வழங்கப்படுமென 

தெரிவித்துள்ளார்.


அதற்குரிய விண்ணப்பப்படிவங்கள் நகராட்சி அலுவலகங்களில் 

கிடைக்கும். விண்ணப்பப்படிவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்ய, 

இணைய முகவரி: http://www.desw.gov.in/scholarship

#இவ்வாய்ப்பை தவற விடாதீர்கள்.மற்றவர்களுக்கும் கூறுங்கள். 

வாழ்த்துக்கள் மாணவர்களே.
      
 Dear all,
Just to inform all parents of 10th passed children.
There is a scholarship scheme by our PM Narendra modi in the name of Abdul Kalam and vajapeyee. for students scoring more than 75% Who will get ₹10,000/
These forms r available in the muncipal corporation .
Pls do not ignore .
For 12th std ,above 85% its 25000
Frwd in all grps.
Someone somewhere needs it...so..plzz  website link to download application http://www.desw.gov.in/scholarship


Wednesday, January 20, 2016

தளராத மாற்றுத்திறனாளி – இன்றொரு தகவல்



இன்றைய நாளிதழை வாசித்துக்கொண்டு இருந்தபோது, மனது பழைய நினைவுகளில் ஒன்றுக்கு தாவிவிட்டது. சுமார் 9 வருடங்களுக்கு முன் சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரில் மேடுபள்ள சாலையில் கால்கள் செயலிழந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் சுமார் 16 வயதுள்ளவன், மூன்று சக்கர வண்டியில், ஒரு சிறிய மூட்டையை வைத்துக் கொண்டு, சிரமத்துடன் வந்துக்கொண்டு இருந்தான்.

அவனை விசாரித்தபோது, கோலமாவு விற்பனை செய்வதாக கூறினான். வருமானம் குறைவுதான். குடும்பம் ஏழ்மையில் இருப்பதால், தானும் பாரமாக இருக்க விரும்பாமல், என்னால் முடிந்த வருமானத்தை ஈட்டி குடும்பத்திற்கு கொடுப்பதாக கூறினான். மனம் கனத்து விட்டது. ஒரு பக்கம் அவனை நினைத்து பெருமையும் அடைந்தேன். பச்சாதாபமாக பேசி, தன்னிரக்கம் அடைய செய்யக்கூடாதென நினைத்து, பாராட்டியதுடன், விற்பனையை அதிகரிக்க சில யோசனைகளையும் தெரிவித்தேன்.

1) எத்தனையோ விழாக்களுக்கு வண்ணக் கோலப்பொடி தேவையுள்ளதால், அதை இத்துடன் சேர்த்து விற்கலாம். பாரம் ஒன்றும் அதிகமில்லை. பாக்கெட்டுகளில் உள்ளதையோ, மொத்தமாக வாங்கி, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்கலாம்.

2) கோலப்பொடி தினமும் எல்லோரும் வாங்கபோவதில்லை. எனவே மாற்று விற்பனையாக நல்ல தரமான லோக்கல் பெனாயில், சேம்பு, சோப்புத்தூள், ஆசிட் போன்றவற்றை வாங்கியோ, தயாரித்தோ விற்கலாம்.

3) ஒரு பகுதியில் (ஏரியாவில்) ஒரு நாள் கோலப்பொடி, மறுநாள் மாற்றுப் பொருட்கள் என விற்பனை செய்தால் வருமானம் கூடும்.

4) முக்கியமாக பொருட்களாக இருந்தாலும், மற்றவர்கள் விற்பதை விட நாம் தரமானதாக விற்க வேண்டும்.

5) வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கு, கடைகளில் விற்பதை விட சிறிது குறைவாக விற்றால், உன்னிடம் தவறாமல் வாங்குவார்கள்.

6) பொருட்கள் மொத்தமாக வாங்கி பேக் செய்தாலும், பெனாயில், சேம்பு தயாரித்தாலும், கடைகளுக்கும் போடலாம்.

7) மிக முக்கியமானது: வருகின்ற வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, வங்கியில் சேமிக்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை தேவைக்கு ஏற்ப தொழிலில் முதலீடு செய்ய வேண்டும். மற்றதைதான் குடும்ப செலவு செய்ய வேண்டும். அதிலும் அனாவசிய, ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். நல்ல உடல் நிலையுடையவர்களே தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, குடும்பம், உடல் நிலை சீர்கெட்டு அவதிபடுகிறார்கள். அதனால் மாற்றுத்திறனாளிகள் எந்த ஒரு தீய பழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருந்தால், தற்போதுள்ள சிரமம் கூடுதலாகாமல் இருக்குமென அந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு, நீண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விட்டு, தேவைப்பட்டால் தொடர்புக்கொள்ள சொல்லி விடைப்பெற்றேன்.

8) அந்த சமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மோட்டார் ஸ்கூட்டர்கள் அரசு சார்பில் வழங்கப்படாததால், அதைக்குறித்து அவனுக்கு சொல்லவில்லை.

மற்றொரு சமயம் அந்த மாற்றுத்திறனாளி சிறுவன், எனை சந்தித்து தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தது, எமக்கு ஆனந்தம் அளித்தது. எதற்காக இன்று அவனைப்பற்றி இவ்வளவு என நினைக்கிறீர்களா?

#சமிப சென்னை பெருவெள்ளத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் நிலை என்னவோ? ஏனென்றால் அவனிருக்கும் குடிசை பகுதி அப்படி.

Wednesday, January 6, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழில் கடன் - கேல்வி பதில் 7



கேள்வி: மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடைப் போன்ற சிறு தொழில்கள் புரிய, மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடன் கிடைக்குமா? என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெட்டிக்கடைப் போன்ற சிறு தொழில்களுக்கு மாவட்ட சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் மூலமாக மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடன் தேசியமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து, அதிகபட்சம் ரூபாய் 2௦௦௦௦/= வரை பெறலாம்.

செய்ய வேண்டியவை:
1)      பெட்டிக்கடை எனில் சாலை நடைப்பதைகள் மற்றும் அரசு இடங்களாக இருந்தால், அங்கு கடை வைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும்.
2)      உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உங்களுக்கு கடனில்லா சான்றும், மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடனுக்கு, கடன் தர ஒப்புதலும் பெறவேண்டும்.
3)      முக்கியமாக நீங்கள் கேட்க கூடிய கடனுக்கு, என்னென்ன செலவுகளுக்காக என்ற விபர பட்டியலை, வங்கி அதிகாரியின் அறிவுரைப்படி வழங்கவேண்டும்.
4)      அந்த வங்கியில் உங்கள் பெயரில் கணக்கு இருக்கவேண்டும் அல்லது புதிதாய் துவக்கவேண்டும். உங்கள் பங்கு தொகையினை வங்கியில் குறிப்பிடும் அளவுக்கு, உங்கள் கணக்கில் செலுத்தவேண்டும்.
5)       மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகநலத்துறை அலுவலகத்தில் கடன், மற்றும் அதற்குரிய மானிய (சப்சீடி) அளவுக்கும் ஒப்புதல் பெறவேண்டும்.
6)      வீட்டிலிருந்தபடி அல்லது வேறு தொழில்களுக்கும் மானியத்துடன் கடன் பெறலாம்.

7)      சமூகநலத்துறை அலுவலக ஒப்புதலை, வங்கியில் கொடுத்து கடனை பெற்று தொழில் நடத்தலாம்.     

8)      முதலும் கடைசியுமாக ஒன்று: நீங்கள் வாங்கும் கடனுக்குறிய தவணைத்தொகையை, தவணை தவறாமல் சரியான நாளில் முழுமையாக செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தினால் கூடுதல் வட்டி செலுத்தாமல், மானியத்தின் முழு பலனையும் அனுபவிக்கமுடியும்.

9)      மேலும் தொழிலுக்கான புது கடன் அல்லது வளர்ச்சி கடனை, எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பெற்று, நீங்கள் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து, சாதனையாளராகவும், சிறப்பான உயர் நிலையையும்  அடைய முடியும்.


*தொழிலிலே உயர்ந்து, வாழ்வில் சிறப்பாய் வாழ. வாழ்த்துக்கள் நண்பர்களே!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் - கேல்வி பதில் 6


 கேள்வி: 40% ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்குமா?
பதில்: 40% சதவீதமும், அதற்கு மேல் ஊனமுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும்.
கேள்வி: 40% சதவீத ஊனமுடைய நான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிகிறேன். வீட்டிலிருந்து சென்று வர, அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் பெற என்ன செய்ய வேண்டும்?
பதில்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், பணியாற்றுகின்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம், குடும்ப அட்டை நகலுடன், விண்ணப்பம் எழுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் நடைப்பெறும் குறைதீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட  சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலக அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.
 கேள்வி: வட்டாச்சியர் (தாலுக்கா) அலுவலக சமூகநலத்துறை வட்டாச்சியரிடம்  விண்ணப்பிக்கலாமா / கூடாதா?
பதில்: விண்ணப்பிக்கலாம். ஆனால், மாவட்ட அளவில்   மாற்றுத்திறனாளிகளுக்கான நல சமூகநலத்துறை அலுவலகம் தனியாகவே இருப்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதே, விரைவான நடவடிக்கைக்கும், விண்ணப்பத்தின் நிலைக்குறித்த தகவலை அறிந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு சிரமமுடையவர்கள், தாலுக்கா) அலுவலக சமூகநலத்துறை வட்டாச்சியரிடம் / அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு:
1)      நடக்கவியலா மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் கிடைக்கும்.
2)      கல்லூரியில் படிப்பவர்கள், அரசு / தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சொந்த தொழில் புரிபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
3)      படிப்பவர்கள், பணிபுரிபவர்கள், அந்தந்த தலைமையிடத்திலிருந்து சான்று பெற்று (உண்மை சான்றும்), வாடகையிடங்களில் தொழில் செய்பவர்கள், அவ்விடத்தின் வாடகை சான்று, சொந்த இடமாக இருப்பின், இருப்பிட வரி / தொழில் வரி சான்று அல்லது மின்னிணைப்பு கட்டணம் ( இதில் தேவையானதை நகல் இணைக்க வேண்டும்)
4)      விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தில் இடம், தேதி குறிப்பிடுவதுடன், இணைப்பு சான்றுகளையும் பற்றியும் முடிவில் தவறாமல் குறிப்பிடவும்.
5)      விண்ணப்பத்தையும், வேறு உண்மை சான்றுகள் இணைத்தால் அதையும் நகல் எடுத்து  பத்திர படுத்திக்கொள்வது நல்லது. 

#இதில் தவறு, குறைப்பாடுகள் இருப்பின் தெரிந்தவர்கள் எடுத்துக்கூறி திருத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Monday, December 28, 2015

கையால் இயக்கும் கார்





கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்..!

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.

இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.
உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.(படத்தில் உதயகுமார்)

நன்றி: Relaxplzz

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி



ஐ.ஏ.எஸ். படிக்கும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டும் குறிக்கோளுடனும், முனைப்புடன் படிக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியதுவம் குறைந்திருந்தாலும், மக்களிடையே பெரும் மதிப்புள்ளது.
உடல் குறையோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சியில் அமரவைக்க ஆசைப்படுகிறேன். அதனால் தான் நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, நாமக்கல்லில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை ஆரம்பித்து வைத்தேன் என மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை துவக்கி வைத்து, சென்னை அறிவியல் நகர துணைத்தலைவராக பணியாற்றி வரும் சகாயம் அவர்கள் உரையாற்றினார்.
#மேலும் மதுரைக்கு அருகிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பேசும்போது, ஐ.ஏ.எஸ். முடித்து பணியில் சேர்ந்து 23 வருடங்களில் 23 முறை பணியிடைமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு எனவும், புவிப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி ( 33 சதவீதம் ) மரங்கள் இருக்க வேண்டும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் 11 சதவீத மரங்கள்தான் உள்ளது. இது கவலைக்குரியது. நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது 20 இலட்சம் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்களால் நடப்பட்டன. இங்கும் அதுபோல் நடப்படவேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களால்தான் தமிழ் வளர்கிறது. எந்தநிலைக்கு உயர்ந்தாலும் தாய்மொழியான தமிழையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.