Thursday, July 10, 2008

அறிய வகை '' பாம்பே ரத்த குரூப் ''

நவிமும்பேயில் பெலாபூர் பகுதியை சேர்ந்தவர் யாசிம் முல்லா; வயது 65. இவர் கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப்பட்ட அவரின், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பெரிதும் குறைந்து போனது. ஆபத்தான நிலையில், வாஷி எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொதுவாக, ரத்தத்ததில் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சிவப்பு ரத்த அணுக்கள் இருக்க வேண்டும். பரிசோதனையில்,, 6 சதவீத சிவப்பு ரத்த அணுக்கள் மட்டுமே இருந்தது.. இதையடுத்து அவருக்கு மாற்று ரத்தம் செலுத்த முடிவு செய்து, ரத்த வகை பரிசோதித்தபோது, அது அரிய வகையான ஏ.பி.ஓ.,ரத்த குரூப்பை சேர்ந்தது என்பது தெரியவந்தது. இது போன்ற அரிய வகை ரத்தம், சிலருக்கு மட்டுமே இருக்கும். இந்தியாவில்,இந்த அரிய வகை ரத்த குரூப், முதல் முதலில் மும்பையில் கண்டு பிடிக்கப் பட்டதால், இதற்கு மும்பே ரத்த குரூப் என்று பெயர் சூட்டப் பட்டது. கிழக்கிந்தியர்கள், ஜப்பபானியர்கள், காசினியர்கள் மத்தியில் மட்டடுமே இந்த வகை ரத்த குரூப் உள்ளவர்கள் இருக்கின்றனர்.
இந்த வகை ரத்த குரூப் கொண்டவர்கள் எம்.ஜி.எம்.மருத்துவமனையின் இணையதளத்தில் 4 பேரும், பூனே கே..இ.எம். மருத்துவமனையில் 20 பேரும்,,ரத்த தானத்திற்காக பதிவு செய்துள்ளனர். எம்..ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம், நாடு முழுவதுமுள்ள ரத்த வங்கிகளில் '' பாம்பே ரத்த குரூப் '' ரத்தம் இருக்கிறதா என்று தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
ஆனால், அதிகாலை 4 மணிக்கு யாசிமுக்கு ரத்தம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வகை ரத்தம் கிடைக்காத நிலையில், பெரும் முயற்சிக்கு பிறகு, பூனே ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனையில் ஒரு யூனிட்டும், மும்பே சாந்தா குரூசை சேர்ந்த பி.எஸ்.ஐ.எஸ். மருத்துவமனையில், ஒரு யூனிட்டும் ரத்தம் கிடைத்தது. ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள மேலும் 2 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. இதையடுத்து, யாசிமின் குடும்பத்தினரின் ரத்தம் பரிசோதிக்க பட்டது. நல்ல வேலையாக யாசிமின் மகள்களில் இருவருக்கு இதே வகை ரத்தம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு முடித்தனர்.
யாசிமின் உறவினர்கள் சிலருக்கு இந்த வகை ரத்த குரூப் இருப்பது, அவர்கள் இது வரை ரத்த பரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்ததால், அவர்களுக்கு தெரியாமலே இருந்தது. மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பியுள்ள யாசிம், கிராமங்கள் தோறும் சென்று ரத்த குரூப் பரிசோதனையின் அவசியத்தையும், ரத்த தானம் அளிக்க வேண்டியதின் அவசியத்தையும், ''பாம்பே ரத்த குரூப் '' இருப்பவர்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
வாஷி எம்.ஜி.எஎ..மருஉத்துவமனையில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. ஆனால், ''பாம்பே ரத்த குரூப் '' நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்ததும், இந்த வகை ரத்தத்ததிற்காக போராட நேர்ந்ததும் இதுவே முதல் முறை.

''நாமும் இரத்த பரிசோதனை செய்துக் கொள்வோம்.''

''இரத்த தானத்தையும் செய்வோம்.''

''இரத்த தானம் செய்யவும் ஊக்குவிப்போம். ''

Tuesday, June 17, 2008

150 முறை ரத்த தானம்- முதியவரின் சாதனை.

அடிக்கடி ரத்த தானம் செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து,நோய் தொற்றுக்கு ஆளாகி விடுவோம் என்ற மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளார் டில்லியை சேர்ந்த தற்போது 75 வயதாகும் முதியவர் சுரேஷ் காம்தாஸ்.
கடந்த 1962 ஆம் ஆண்டு இந்திய - சீன போரின் போது, படுகாயமடைந்த ஏராளமான வீர்ர்களுக்கு ரத்தம் தேவைப் பட்டது. அப்போது, தேசிய அகடமியை சேர்ந்த நண்பர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தார் சுரேஷ் காம்தாஸ். அங்கு, காயமடைந்திருந்த ஒரு பெண்ணுக்கு நான்கு மகன்கள் இருந்தும், ஒருவரும் ரத்ததானம் அளிக்க முன் வரததால், அப்பெண் ரத்தத்திற்காக காத்திருந்ததைப் பார்த்தார். அப்போதுதான் ரத்ததானத்தின் அவசியத்தை அறிந்தார் சுரேஷ் காம்தாஸ்.
அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக முதல் முறையாக ரத்ததானம் செய்தார். அதிலிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ரத்ததானம் செய்து வருகிறார். சிலர் பணத்திற்க்கா ரத்ததானம் செய்வதுண்டு. ஆனால், ரத்ததானம் செய்ததிற்காக இதுவரை ஒரு காசு கூட சுரேஷ் காம்தாஸ் வாங்கவில்லை.

கடைசியாக 2000 வது ஆண்டு வரை ரத்ததானம் செய்துள்ளார். ரத்ததானம் செய்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் தொற்று ஏற்படும் என்று பலரும் கூறி வந்தனர். அவர்களது எண்ணம் தவறானது என்பதை நிறுபித்துள்ளேன். உண்மையில் ரத்தத்தை தானமாக கிடைக்கப் பெற்றவர்களின் நல்லாசியுடன் நீண்டகாலம் வாழ முடியும் என்று, பெரிமிதமாக கூறுகிறார்.
இந்தியாவுக்கு ஆண்டு தோறும் 90 இலட்சம் யூனிட் ரத்தம் தேவைப் படுகிறது. ஆனால் சுரேஷ் காம்தாஸ் போன்ற தன்னார்வலர்கள் குறைவாக இருப்பதால், 60 இலட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே பெற முடிகிறது. இதில் 53 சதவிகிதம் மட்டுமே இலவசமாக தானம் பெறப்படுகிறது. கடந்த 2002ல் ரத்தம் கொடுத்தவர்களில் 43 சதவீதத்தினர் மட்டுமே தானமாக கொடுத்துள்ளனர். இந்தியாவை ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் ரத்ததானம் செய்வது அதிகமாக உள்ளது. நேப்பாளத்தில் 90 சதவீதமும், தாய்லாத்தில் 95 சதவீதமும், இந்தோனேஷியாவில் 77 சதவீதமும், இலங்கையில் 60 சதவீதமும், மியான்மரில் 57 சதவீதமும் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இந்தியாவில் தானமாக பெறப்படும் ரத்தத்தில் 47 சதவீதம், ஒருவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஆபத்தான நிலையில் கொடுப்பதற்காக அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களால் தானமாக கொடுக்கப் படுகிறது.
இனிமேல் அப்படி பார்க்காமல் 'இறைவனால் படைக்கப்பட்ட ரத்தத்தை, இறைவனால் படைக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் போது தவராமல் தர முயல்வோம்'.

பொதுவாக ரத்ததானம் செய்ய தகுதிகள்
1 ) 16 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட , 45 கிலோ எடைக்கு அதிகமுள்ள அனைவருமே ரத்ததானம் செய்யலாம்.
2 ) இவர்கள், எச்.ஐ.வி., ஹெபடடிஸ் பி மற்றும் சி நோய் தாக்கியவர்களாக இருக்கக் கூடாது என்பது முக்கியமான நிபந்தனையாகும்.
3 ) ரத்தத்தில் சிவப்பணுக்கள் 12.5 கிராம் அளவுக்கு இருக்க வேண்டும்.

சதாரணமாக ஒருவரது உடலில் 5.6 லிட்டர் ரத்தம் உள்ளது. தானமாக கொடுக்கப்படும் 450 மில்லி., ரத்தம், இரண்டே நாளில் மீண்டும் உடலில் உற்பத்தியாகி விடும் என்ற உண்மை பலருக்கு தெரிவது இல்லை. தொடர்ந்து ரத்தம் கொடுப்பதால், உடல் ரீதியான எந்த பிரச்சனையும் ஏற்படாது. தற்போதைய நிலையில், இந்தியாவுக்கு தேவையான ரத்தத்தில் 30 சதவீதம் குறைவாகவே உள்ளது. தன்னார்வமுள்ளவர்களால் மட்டமே இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே
' முடிந்த பொழுதெல்லாம்,
முடிந்த வரை தவராமல்,
முடிந்த அளவு தானம் செய்வோம் ரத்தத்தை'.

Monday, June 16, 2008

மனித நேயம் மறக்கலாமா ???....

ஜூன் 15, 2008 தேதியிட்ட தினமலர்- வாரமலரில் 'இது உங்கள் இடம்'

என்ற பகுதியில் விருதுநகர்.கு.பாலசுப்ரமணியன் என்ற வாசகர்,

மேற்கண்ட தலைப்பில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனால் ஏற்பட்ட

மன உளைச்சலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள, அவர் எழுதியதை,

அப்படியே கீழே பதித்துள்ளேன். இதோ,

திருச்சி பேருந்து நிலையத்தில், அரவாணி ஒருவர் இயற்கை

இபாதையின் காரணமாக, அங்குள்ள கழிவறைக்கு 'டாய்லெட்'

சென்றார். அப்போது அங்கிருந்த ஆண்களும், பெண்களும் சேர்ந்து

அவரை, உள்ளே விட மறுத்தனர். அவர்களின் செய்கையால்

உள்ளத்தாலும், இயற்கை உபாதையின் தீவிரத்தாலும் மிகவும்

பாதிக்கப் பட்டு, இருந்த நிலையிலேயே, மலம் கழித்து விட்டார் ( டூ- பாத்ரூம் போய் விட்டார்).

அதையும் அங்குள்ளவர்கள் பார்த்து சிரித்தனரே தவிர, யாரும் அனுதாப படவோ

அல்லது அந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்கவோ துணியவில்லை.

அவருக்கு ஆதரவாக பேசிய எனக்கும், கேலிப்பேச்சே

பரிசாக் கிடைத்தது. பின் அந்த அரவாணி அழுதுக் கொண்டே

போய் விட்டார்.

மனிதர்களே... வாடிய பயிர் மேல் காட்டும் வள்ளலார் ஆக நீங்கள்

இல்லாவிட்டாலும் கூட, சக மனிதர்கள் மேல் மனிதநேயமாவது,

அவர்களின் இக்கட்டான சூழ்நிலையில் காட்டுங்கள். மனிதநேயத்தை

மறந்து விட்டீர்களா ? இல்லை, மனிதன் என்பதையே

மறந்து விட்டீர்களா? என்று கேட்டு எழுதியுள்ளார்.

இதை வாசிக்கின்ற வாசகர்களாகிய நீங்களும் அறிய வேண்டும்.

மற்றவர்களையும் உணரச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்

கொள்கிறேன்.

மனிதத்தைஉணர்வோம் ! மனிதநேயத்தை வளர்ப்போம் !!

Monday, June 9, 2008

தேவை மன உறுதி

நம்மில் மிக பெருபான்மையோர், நம் உடல் குறைகளையே பெறிதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். நம்மை விட அதிக உடல் குறையுடையோர்களை அறியும் போதும்பார்க்கும் போதும்நம் குறைகள் சிறிதாகி ஊக்கமும் உத்வேகமும் அடையச் செய்யும். அப்படியானஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்காவில் டென்னசி மாநிலத்தில், மெம்பிஸ் என்ற இடத்தில் வசித்த டயானிஓடெல் ( வயது 63 ), இவருக்கு 3 வயதாக இருந்த பொழுது 'பல்போ ஸ்பைனல்'என்ற அபூர்வ போலியோ வியாதி தாக்கியது. அவர் சுவாசம் கூட விடமுடியாதபடி மிக மோசமாக பாதிக்கப்பட்டார். போலியோ தடுப்பூசி வராத காலம் அது.
அவர் பிரச்சனை தீர, ஏழு அடி உயர உலோக குழாயினுள், அவர் உடலை வைத்து, அதில் பொருத்தப்பட்ட இரும்பினாலான நுறையிரல் மூலம் செயற்க்கை சுவாசம்அளிக்கப்பட்டு, 60 ஆண்டு காலமாக அதிலேயே வாழ்ந்து வந்தார். ஒருநொடிக்கூட, அந்த உலோக குழாயிலிருந்து வெளியே வர முடியாது. அவருடன் யார் பேசினாலும், கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்து தான் பேசவேண்டும். நேரடியாக முகம் பார்த்து பேசினால் சுவாசப்பிரச்சனை அவருக்கு வந்து விடும்.

இப்படி படுத்தபடியே, பள்ளி,கல்லூரி படிப்புகளையும் படித்து முடித்தார்.அவர் படுத்திருந்த உலோக குழாயுடன் பொருத்தப் பட்டிருந்த இரும்புநுரையிரல்செயலிழக்காமலிருக்க மின்சார பாதுகாப்பு சாதனமும் உள்ளது. ஆனால், சமிபத்தில் ஏற்பட்ட, திடீர் மின்தடை பல நிமிடங்கள் நீடித்ததுடன் மின்பாதுகாப்பு சாதனமும் இயங்கவில்லை. இதனால் சுவாசிக்க முடியாமல் 'டயானி' திணறினார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க குடும்பத்தினர் எவ்வளவோ முயன்றனர். டாகடரை அழைத்து வருவதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது.

இவரைப் பற்றி டாக்டர்கள் கூறுகையில், 'பல்போ ஸ்பைனல்' என்னும் இந்தஅபூர்வ போலியோ நோய் தாக்கியவர்கள். வெளியில் நடமாட முடியாது. எந்தநோய்கிருமியும் தீண்டாத வகையில் உலோக குழாயில் வைத்துதான் பாதுகாக்கவேண்டும். அப்படி தான் 'டயானி' வைக்கப்பட்டிருந்தார். நோய் பாதித்தபின்பு 60 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததற்கு அவர் மன திடம்தான் காரணம் எனதெரிவித்துள்ளனர்.

அப்படி இருக்கையில் நாம் ஏன் பயப்பட வேண்டும். நம்மை பாதித்த நோயைப்பற்றி கவலைப் படாமல், நாம் செயலாற்ற வேண்டிய கடமைகளை மட்டும் நினைவிற்க்கொள்வோம்.

வேண்டாம் இந்த விபரீதம்

இந்த பதிவை துவக்கியதிற்கு காரணமே, ஒரு வித்தியாசமான

முறையிலே, நண்பர்கள், உறவினர்கள் பற்றி

தேவையான, முக்கியமான அனைத்து விபரங்களை பதித்து, எந்த

நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளும் வித்ததில் என்று

நினைத்திருந்தேன். ஆனால் தேவையற்ற பல பிரச்சனைகளை

சந்திக்கக் கூடிய நிலையேற்படலாம். எனவே ' வேண்டாம் இந்த

விபரீதம் ' என்ற அறிவுரையினால், அந்த முயற்சியைக்

கைவிட்டுவிட்டு, வேறு தகவல்களை பதிவு செய்ய முடிவு

செய்துள்ளேன். அதன் படி அடுத்த பதிவை படித்து உங்கள்

கருத்துக்களைப் பதிவு செய்யுங்களேன்.