Tuesday, March 25, 2014

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நிறைவு

தையல் பயிற்சி நிறைவு.

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கமும் இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சேலம் சிவாம்பிகா பஸ் அலுவலக வளாகத்தில் Ln. Dr. P.அத்தியண்ணா தலைமையில் நடைப்பெற்றது.

Ln.Dr.P.அத்தியண்ணா, சங்க செயலாளர் வெங்கட்ராமன், சங்க ஆலோசனை குழு உறுப்பினரான யாம் ( A.M.பத்ரி நாராயணன்), Ln.Dr.P.அத்தியண்ணா மகன், மருமகள், தையற்பயிற்சி ஆசிரியை திருமதி.விஜயலட்சுமி மற்றும் திரு.S.ஏசுதாஸ் ராஜேந்திரன் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்க விழா சிறப்பாக நடந்தேறியது.

தையற்பயிற்சி ஆசிரியருக்கான பயிற்சி கட்டணம் முழுவதையும்
Ln.Dr.P.அத்தியண்ணா அவர்கள் ஏற்றுக் கொண்டார்.