Monday, March 16, 2009

திருகோயில்களில் எவ்விதம் வழிப்படுவது.

* திருகோயில்களில் கொடிமரம்,பலிபீடம் இவற்றின் முன்புதான் கீழே விழுந்து வணங்க வேண்டும். இந்த கொடிமரத்தையும்,பலிபீடத்தையும் தாண்டி விட்டால் உள் பிரகாரத்திலும் கருவறையின் முன்பும் மற்ற இடங்களிலும் கீழே விழுந்து வணங்கக் கூடாது. ஏனெனில்கொடிமரம் தான்டிய பின்பு கருவறை வரையிலும் சக்தி நிறைந்த பல தேவதைகள் மந்திரப் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. அவ்விடம் நாம் மீழே விழுந்து வணங்கினால் அந்த தேவதைகள் மீது நமது கால் படக்கூடும்.

*  திருகோயில்களில் அபிஷேகம் அல்லது திருமஞ்சள் தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் போது இடதுகையின் மேல் சிறு வஸ்திரம் வைத்து அதன் மேல் வலது உள்ளங்கையை குவித்து வைத்துக் கொண்டு அந்த தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு காரணம் அபிசேகத்தினால் புனித சக்தி வாய்ந்த அந்த ஜலம் கீழே விழுந்து பக்தர்களின் கால்களில் மிதிப்படக்கூடாது என்பதே.

*  திருகோயிலினுள் செல்லும் போது கைலி மற்றும் கால்சட்டை ஆகியவற்றை அணிந்து செல்லக்கூடாது. கேரளா ஆலயங்களில் இவ்விதிமுறைகள் கண்டிப்பாக அமல் செய்யப்படுகின்றன.

*எக்காரணத்தைக் கொண்டும் ஈரத்துணியுடன் திருகோயிலுக்குள் சென்று வழிப்படக்கூடாது. திருப்பதி-திருமலை திருகோயிலினுள் அங்கப் பிரதட்சினம் செய்பவர்களுக்கு மட்டும் இவ்விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

* திருகோயிலில் இறைவனைத் தவிர வேறு எவராக இருந்தாலும் அவர்களை வணங்ககூடாது.

* திருகோயிலினுள் ஆத்ம்ப் பிரதட்சணம் ( தன்னைத் தானே சுற்றிக் கொள்வது ) கூடாது.

* பிரசாதமாக கொடுக்கும் குங்குமம், விபூதி, துளசி, வில்வம் ஆகியவற்றைப் பலர் திருகோயில்களிலேயே போட்டு விட்டு வந்து விடுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

Tuesday, March 10, 2009

எல்லாம் கிடைக்கும் --- 1

''எல்லாம் கிடைக்கும்'' என்ற இந்த தலைப்பிலே, திரு.மனம் சேர சந்திரகாசம் எம்.ஏ.,பி.எட்., என்ற ஒரு பெரியவரால் 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த ஒரு சிறு பதிப்பை (நூல்)  வாசிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்து. அப்புத்தகத்தில் வெளியிடப்பட்டப்படியே தொடர்ந்து வெளியிடுகிறேன். இடையிடையே தேவையென மனதுக்கு படின், என்னுடைய கருத்துக்களையும் அடைப்புக் குறிக்குள் வெளியிட்டிருப்பேன்.உங்கள் மேலான கருத்துக்களையும் தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1. ஆண்டவனோடு பழக வேண்டும்
=============================

         அந்த நண்பர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.அவர் பெரிய பணக்காரரோ, பெரிய அதிகாரியோ இல்லை. சாதாரண அரசு ஊழியர். தொட்டுக்கொள், துடைத்துக்கொள் என்று தான் அவர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் சங்கடங்கள், துன்பங்கள் எல்லாம் அவருக்கும் வருகின்றன. இருந்தாலும் அவர் எதற்கும் அலட்டிக் கொள்வதே இல்லை. எப்போதும் புன்னகையுடனே வலம் வருவார். மனத்தை லேசாக வைத்துக் கொண்டு எந்த சூழ்நிலையையும் துணிவுடன் எதிர்க் கொள்வார். அவர் மகிழ்ச்சியின் ரகசியம் என்ன என்று தெரிந்துக் கொள்ள உண்மையிலேயே எனக்கு பெருத்த ஆர்வம்.
       
        ஒரு நாள் அவரிடம் நேரடியாகவே கேட்டேன். எப்படி உங்களால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க முடிகிறது?. சிறு சலனம் கூட அடையாமல் கடமைகளை எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறீர்களே என்றேல்லாம்  வெளிப்படையாகவே கேட்டேன்.

         ஆண்டவன் தான் , நான் நெருங்கி பழகும் பெரியவர் என்றார் நண்பர். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவருக்கு ஏதோ மரை கழண்று விட்டதோ என்று என் அறிவுக் குறைவால் நினைத்தேன்.
                                                                                                                                                                                                                                                                                                           தொடரும்.....

Monday, January 5, 2009

எங்கே இவர்களின் மனிதாபமானம்

சேலம் சிறுவனின் மரணச்செய்திகள் மனத்தை உருக்குவதாக உள்ளது. என்ன மனிதர்கள் இவர்கள்?. சிறுவனுக்கு எப்படி அடிப்பட்டது என்பது பிறகு இருக்கட்டும். அவன் படித்த பள்ளி நிர்வாகிகளின் செயல் மிகவும் வெட்கப்படக் கூடியதாக உள்ளது. அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போதே பள்ளி சீருடைகளையும், அடையாள அட்டையையும் கழற்றிக் கொண்டு போய்விட்டார்கள் என்ற செய்தியையும், அதை தொடர்ந்து மற்ற சிலரின் செயல்களைப் பற்றி படிக்கும் போதும் இவர்களின் மனித்ததன்மையைப் பற்றி என்ன சொல்ல?.

கிடைக்காதப் பொருள் கிடைத்தும், சட்டங்களின் பெயராலே காலதாமதம் செய்து உபயோகப்படுத்தாமல் நாசம் செய்து மண்ணில் போட வைத்து விட்டார்கள். அருமைச் செல்வனை இழந்த சோகத்திலும் மண்ணுக்கு போகின்ற நிலையிலே உள்ள உடலை, உடல் நோயினால் ஊனமான நிலையில் உள்ள சிலராவது நலம் பெறட்டுமே என்னும் போற்றக்கூடிய எண்ணம் கொண்டு, உடல் தானம் செய்ய,அல்லல் பட்டு  சேலத்திலிருந்து சென்னைக் கொண்டு வந்து, தாய் என்ற முறையிலே பெற்றவள் கையெழுத்திட்டும், சட்டம் என்ற பெயராலே தகப்பன் முறையுள்ளவனின் கையெழுத்தை கேட்க, குடும்ப தகறாரை உட்புகுத்தி  கையெழுத்திட மறுத்தும், காலதாமதம் செய்தும், கிடைத்தற்கரிய பொருளையும், செயற்கரிய செயலையும், கிடைக்கயிருந்த புகழையும்  குப்பையில் போட்டு விட்டான். அவர்களின் குடும்பத்தில் யார் மேல் குற்றமென்று குடும்ப விவகாரத்தில் நுழையவிரும்ப வில்லை. தன் மகனின் உடலை தானம் செய்ய முடிவெடுத்து செயல்படுத்த முனைந்த அந்த தாயின் இழப்பிற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

சட்டத்தின் படியே நடக்க வழிகளாயில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு வெறும் வாய்மொழி உத்திரவிட்டே அழைத்து வர செய்திருக்கலாம். ஒப்புதல் பெறவேண்டிய விண்ணப்பத்தை ஃபேக்ஸ் மூலமாக மருத்துவ அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி, அவசர நிலையை விளக்கி, தேவைபட்டிருந்தால் சாம, பேத, தண்டத்தை அவனிடம் பயன் படுத்தி கையெழுத்து பெற்று, அதிகாரிகளும் சான்று ஒப்பமிட்டு, திரும்ப ஃபேக்ஸ் மூலமாக அனுப்ப செய்து ஒரு சில மணித்துளிகளிலேயை சட்ட முறைகளை முடித்து தானம் பெற்றிருக்கலாமே. சட்டத்தை எதற்கெதற்கோ வளைப்பவர்கள், ஒரு நல்ல செயலுக்கு சிறிது வளைத்தாலென்ன?. ஏன் செய்யவில்லை?. யார் செத்தாலென்ன? யார் சிரமப்பட்டாலென்ன? என்ற அலட்சியமும் அக்கறையின்மையுமே என எண்ணத் தோன்றுகிறது. நிலையின்றி துடிக்கிறது இதயம். உயிரிழந்த சிறுவனை நினைத்தும், நோய் தீர வழிகிடைத்தும், பயன்றறு போனதினால் திகைத்திருக்கும் நோயளிகளை நினைத்தும். அந்த சிறுவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யுமென நினைக்கிறேன்.

ஏ.எம்.பத்ரி நாராயணன்.
சென்னை.
28/12/2008.

பின் குறிப்பு::: பத்திரிக்கைகளில் வந்த செய்திகளைப் படித்து எனக்கு ஏற்பட்ட வருத்தத்தினால், இதை எழுதியுள்ளேன். இந்த செய்தியில் ஏதேனும் குறைகளோ தவறுதல்களோ விடுபட்டிருந்தாலோ வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதை ''தினமலர்'' நாளிதழில் 'உங்கள் இடம்'