Monday, March 16, 2009

திருகோயில்களில் எவ்விதம் வழிப்படுவது.

* திருகோயில்களில் கொடிமரம்,பலிபீடம் இவற்றின் முன்புதான் கீழே விழுந்து வணங்க வேண்டும். இந்த கொடிமரத்தையும்,பலிபீடத்தையும் தாண்டி விட்டால் உள் பிரகாரத்திலும் கருவறையின் முன்பும் மற்ற இடங்களிலும் கீழே விழுந்து வணங்கக் கூடாது. ஏனெனில்கொடிமரம் தான்டிய பின்பு கருவறை வரையிலும் சக்தி நிறைந்த பல தேவதைகள் மந்திரப் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. அவ்விடம் நாம் மீழே விழுந்து வணங்கினால் அந்த தேவதைகள் மீது நமது கால் படக்கூடும்.

*  திருகோயில்களில் அபிஷேகம் அல்லது திருமஞ்சள் தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் போது இடதுகையின் மேல் சிறு வஸ்திரம் வைத்து அதன் மேல் வலது உள்ளங்கையை குவித்து வைத்துக் கொண்டு அந்த தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு காரணம் அபிசேகத்தினால் புனித சக்தி வாய்ந்த அந்த ஜலம் கீழே விழுந்து பக்தர்களின் கால்களில் மிதிப்படக்கூடாது என்பதே.

*  திருகோயிலினுள் செல்லும் போது கைலி மற்றும் கால்சட்டை ஆகியவற்றை அணிந்து செல்லக்கூடாது. கேரளா ஆலயங்களில் இவ்விதிமுறைகள் கண்டிப்பாக அமல் செய்யப்படுகின்றன.

*எக்காரணத்தைக் கொண்டும் ஈரத்துணியுடன் திருகோயிலுக்குள் சென்று வழிப்படக்கூடாது. திருப்பதி-திருமலை திருகோயிலினுள் அங்கப் பிரதட்சினம் செய்பவர்களுக்கு மட்டும் இவ்விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

* திருகோயிலில் இறைவனைத் தவிர வேறு எவராக இருந்தாலும் அவர்களை வணங்ககூடாது.

* திருகோயிலினுள் ஆத்ம்ப் பிரதட்சணம் ( தன்னைத் தானே சுற்றிக் கொள்வது ) கூடாது.

* பிரசாதமாக கொடுக்கும் குங்குமம், விபூதி, துளசி, வில்வம் ஆகியவற்றைப் பலர் திருகோயில்களிலேயே போட்டு விட்டு வந்து விடுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

No comments: