Monday, December 28, 2015

கையால் இயக்கும் கார்





கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்..!

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.

இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.
உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.(படத்தில் உதயகுமார்)

நன்றி: Relaxplzz

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி



ஐ.ஏ.எஸ். படிக்கும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டும் குறிக்கோளுடனும், முனைப்புடன் படிக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியதுவம் குறைந்திருந்தாலும், மக்களிடையே பெரும் மதிப்புள்ளது.
உடல் குறையோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சியில் அமரவைக்க ஆசைப்படுகிறேன். அதனால் தான் நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, நாமக்கல்லில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை ஆரம்பித்து வைத்தேன் என மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை துவக்கி வைத்து, சென்னை அறிவியல் நகர துணைத்தலைவராக பணியாற்றி வரும் சகாயம் அவர்கள் உரையாற்றினார்.
#மேலும் மதுரைக்கு அருகிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பேசும்போது, ஐ.ஏ.எஸ். முடித்து பணியில் சேர்ந்து 23 வருடங்களில் 23 முறை பணியிடைமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு எனவும், புவிப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி ( 33 சதவீதம் ) மரங்கள் இருக்க வேண்டும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் 11 சதவீத மரங்கள்தான் உள்ளது. இது கவலைக்குரியது. நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது 20 இலட்சம் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்களால் நடப்பட்டன. இங்கும் அதுபோல் நடப்படவேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களால்தான் தமிழ் வளர்கிறது. எந்தநிலைக்கு உயர்ந்தாலும் தாய்மொழியான தமிழையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.

Thursday, November 26, 2015

அனுபவங்கள்- இன்றொரு தகவல்... - தன்னம்பிக்கையாளர்கள் – 1



                   
இன்று ( November 26, 2013 ) பணி நிமித்தமாய் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில்

1) கால் பாதிப்படைந்த ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர், விந்தி விந்தி நடந்துக் கொண்டிருந்தார். அவரை நிறுத்தி விசாரித்தோம். எம்.ஏ., பொருளாதாரம் படிப்பதாகவும், இன்று தேர்வுயெனவும், சேலத்திற்கு அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருவதாகவும் தெரிவித்தவரிடம், வாழ்த்துக் கூறி, தொடர்ந்து அவரிடம் தொடர்புக் கொள்ள, தொலைப்பேசி எண்களைக் கேட்டதற்கு, எம்மிடம் கைப்பேசியில்லை என்றதும், எமக்கு ஒரு வியப்பு. இவர் எம்மிடம் மறைக்கிறாரோ, விரும்பவில்லையோ என நினைத்து, கேட்டே விட்டேன். என்னப்பா சாதாரணமாக பள்ளிக் குழந்தைகளிடமே கைப்பேசி புழங்குகின்ற நேரத்தில், உன்னிடம் இல்லையென்கிறாயே.
எங்கள் குடும்ப வசதிக்கு, கைபோன் வைத்துக் கொள்ள இயலவில்லை. பொருளாதாரம் படிக்க வேண்டும் என்ற ஆவலினால், எம்.ஏ. பொருளாதாரம் படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றதும், எமக்கு மிக்க வருத்தமாகி விட்டது. அவரிடம் யாம் கூறியதற்கு வருத்தம் தெரிவித்ததுடன், வாழ்த்துக்களையும் கூறி, உதவிகள் தேவைப்படின் தயங்காமல் எந்த சமயத்திலும் முன்கூட்டியே தெரிவிக்கவும், முடிந்ததை செய்த உதவுகிறேனென சொல்லி, கல்லூரிக்கருகில் விட்டு விட்டு வந்தோம்.

சிறிது தூரம் வந்ததும், ஒரு கையிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர், அவரிடமும் பேச்சுக் கொடுத்தோம்.
2) சிறு வயதிலேயே வலது கையை விபத்தில் இழந்து விட்டதாகவும், 10ம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது ஒரு ஹார்ட்வேர் கடையில் வேலைப்பார்ப்பதாகவும், சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே அரசு வேலை எதுவாக இருப்பினும் உடனடியாக வாங்கி தந்து உதவும்படி கேட்டார், அத்துடன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வேலை கேட்க போவதாகவும் தெரிவித்தார். முதல்வரை ஒரு முறை சந்தித்து விட்டால் வேலை கிடைத்து விடும் என்றும் நம்புகிறார். ஒரு பக்கம் அவர் செயல்பாடும், சொற்களும் நகைப்பை ஏற்படுத்தினும், மற்றொரு பக்கம் அவர் அறியாமையைக் கண்டு மிகவும் வருத்தத்தையே ஏற்படுத்தியது. தற்போது இருக்கும் சூழ்நிலையை எடுத்துக் கூறி, வாழ்க்கைக்கு வருவாய், சில தொழிலுக்கான வழிமுறைகளை தெரிவித்து அனுப்பி வைத்தோம்.

அந்த நேரத்திலேயே கால் இழந்த ஒரு மாற்றுத்திறனாளியை சந்தித்தோம்.
3) மூன்று சக்கர மிதிவண்டியில் வந்தார். நடுத்தர வயதானவர். உடன்பிறந்தவர் யாருமில்லை. தாயும் இல்லை. வயதான தந்தை மட்டும் உடன் இருக்கிறார். வருமானம் அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை மட்டும். தந்தைக்கு முதியோர் உதவித்தொகை இதுவரை இல்லை. மூன்று சக்கர மிதிவண்டியும், செயற்க்கைக்காலையும் சேலத்தில் ஒரு அறக்கட்டளை மூலம் பெற்று இருக்கிறார். இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடு திகழ்கிறார். ஒரு டம் டீ கேன் ஒன்று யாரேனும் கொடுத்து உதவினால், பேருந்து நிலையத்தில் "டீ" விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டிக்கொள்வேன் என்றார். மிகவும் மகிழ்வாக இருந்தது.

இணையம்வழியாக தகவல் வெளியிட்டு உதவிப் பெற்றுத் தருகிறேன் என கூறி மேலும் தன்னம்பிக்கை அளித்து அனுப்பினோம்.

# யாரினும் உதவ விரும்பினால் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.


வணக்கம் நண்பர்களே!

ஆம்பல் மலர் வலைதளத்தில் November 26, 2013 ல் ·வெளியிடப்பட்டுள்ளது. இத்தளத்தில் விடுப்பட்டு விட்டதால், இன்று மீள்பதிவு செய்யப்பட்டது.

Wednesday, November 25, 2015

தன்னம்பிக்கையாளர்






சாதனையாளர் அல்ல தன்னம்பிக்கையாளர்.

Sunday, November 1, 2015

நீண்ட நாள் கோரிக்கை


சேலம் மாவட்டத்தில் 70க்கு மேற்பட்ட பார்வையற்ற ஆசிரியர்கள்  உள்ளனர். அதில் 10 பேர் கல்லூரி பேராசிரியர்கள்.

தமிழக அரசிடம் நீண்ட நாள் கோரிக்கைகள்:
1) மற்ற ஆசிரியர்களுக்கு கம்பியூட்டர் (கணினி) பயிற்சி அளிப்பதுபோல, பார்வையற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் (கணினி) பயிற்சி அளிக்க வேண்டும்.
2) பார்வையற்ற கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வு மேற்படிப்பை தொடர ஏதுவாக, வாசிப்பு உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள, ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. அதேபோல பார்வையற்ற பள்ளி ஆசிரியர்கள் மேற்படிப்பு தொடர, தமிழக அரசும் வாசிப்பு உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள நிதியுதவி செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்காக, ஐந்தாண்டுக்கும் மேலாக பலகட்ட போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இந்த நேரத்திலாவது எங்கள் கோரிக்கைகளை, முதல்வர் அவர்கள் தாயுள்ளத்தோடு ஏற்றுக் கருணை காட்ட வேண்டுமென, சேலம் மண்டல பார்வையற்ற ஆசிரியர்கள்  சங்க கிளை செயலாளர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 நாளிதழ் செய்தி. 24/10/2015

#எத்தனையோ இலவசங்கள். இது தேவையான முக்கிய உதவிதான். மனம் விசாலப்படவேண்டும்.

வாழ நினைத்தால் வழியாயில்லை - தன்னம்பிக்கை தகவல்.

கோவையில் துரைராஜ் என்பவர் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, ஒர்க் ஷாப்பில் 15 வருடம் வேலை செய்த அனுபவத்தினால், தனியாக ஒர்க் ஷாப் ஆரம்பித்து நட்டம் அடைந்தவர். ஒர்க் ஷாப் அருகில் மின்சார அலுவலகத்தில் (இ.பி. ஆபிஸில்) மின்கட்டணம் செலுத்த, மக்கள் வரிசையாக வெகுநேரம் காத்திருந்து சிரமபடுவதை பார்த்து, அவர்களுக்கு பதிலாக, மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களிடம் மின்கட்டணம் வசூலித்து, அவர்களுக்கு பதிலாக மின்சார அலுவலகத்தில் நாம் கட்டி, அதற்காக சிறு கட்டணமும் வசூலித்தால் அவர்களுக்கு சிரமமும், நேரமும் குறைந்து நமக்கு வருமானமும் கிடைக்குமென எண்ணி, தெரிந்தவர்களிடம் அட்டைகளையும் பணமும் பெற்று மின்சார அலுவலகத்திற்கு சென்று, நம்பிக்கையான முறையில் செயல்பட்டதினால், வாடிக்கையாளர்கள் பெருகினார்கள்.
அதேசமயத்தில் கணினி ஆன்லைன் மூலமாக மின்கட்டணம்      செலுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதை அறிந்து, கணினி ஆன்லைன் மூலமாக எப்படி மின்கட்டணம் செலுத்துவது என்பதை ஒருவரிடம் அறிந்துக்கொண்டு, இதுவரை பயன்படுத்தி வந்த டிவிஎஸ் 50யுடன் ஒரு   லேப்டாப் மற்றும் மின்கட்டணம் செலுத்தியதற்கான பில் (ரசிது) தருவதற்காக பிரிண்டரும் வாங்கிக்கொண்டதுடன், வங்கியில் கணக்கு துவக்கி, சிறிது பணம் போட்டுக் கொண்டேன்.
தற்போது 36௦௦ வாடிக்கையாளர்கள் உள்ளனர். மின்கட்டணத்தைக் குறிக்க மின்சாரவாரியத்திலிருந்து ஒரு குறிபிட்ட நாள் வருவதைப்போல  ஒவ்வொரு வீதிக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று, மின்கட்டணம் வசூலித்துக் கொண்டு, கணினி இண்டர்நெட் மூலம் பிரிண்டரில் உடனே பில் கொடுத்துவிடுவதால், ஆன்லைன் மூலமாக மின்வாரியத்துக்கு பணம் சென்று சேர்ந்து விடுகிறது. வசூலித்த பணத்தை அவ்வப்போது வங்கியில் செலுத்தி விட்டால் போதும்.
அதேபோல் வாடிக்கையாளருக்கு ஏற்றபடி அன்றைய நாள் முன்கூட்டியே நம் வங்கி கணக்கில் பணம் இருக்க வேண்டியது முக்கியம். வண்டியின் பெட்ரோல் செலவுக்கும், இண்டர்நெட் மற்றும் பிரிண்டர் செலவுக்காகவும் ஒரு பில்லுக்கு 10 ரூபாய் வசூலிக்கிறேன். மிகவும் சிரமப்படுபவர்கள் தெரிந்தால் அவர்களிடம் அதுவும் வாங்குவது இல்லை.
ஏரியாவுல இபி காரர்களுக்கு கடைசி நேரத்தில் வரிசை கட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து விடுதலை. மின்கட்டணம் செலுத்த  வேலைகளை விட்டுவிட்டு மழை, வெயில் என்று பாராமல் செல்ல வேண்டிய சிரமம் குறைவதால் வாடிக்கையாளருக்கும், 9வது மட்டும் படித்த எனக்கு இந்த வருமானத்தினாலும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.


#நீங்களும் முயற்சித்து, வருமானத்தை பெருக்கி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.

Friday, August 14, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஒன்றியம் வாரியாக 14 வயதுக்குட்பட்ட  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்.





#தவிர விட்டவர்கள் மற்ற தேதிகளில் அருகில் நடைப்பெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்கிறேன் 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை






சென்ற ஆகஸ்ட் 11ம் தேதி சங்ககிரி பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிந்து அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. அதில் கலந்துக் கொண்ட 128 பேரில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டது. 3 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

#இந்த முகாம் நடக்க காரணமான திட்டத்திற்கும், நடத்திய அதிகாரிகள், மருத்துவர்களுக்கு நன்றியினையும் மகிழ்வினையும் இத்தருணத்தில் பகிர்ந்துக் கொள்கிறோம்.


#குறிப்பாக அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்கும், வயது வித்தியாசமில்லாமல், அந்தந்த பகுதிகளில் முன்கூட்டியே தெளிவாக விளம்பரம் செய்து முகாம்கள் நடத்தினால், அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களின் துணையாளர்களுக்கும் பண, நேர விரயத்துடன், பயண சிரமம் பெருமளவு  குறையும் என்பதை சம்மந்தபட்ட அதிகாரிகள் உணர்ந்து ஆவன செய்ய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்கள் என நம்பி தமிழகத்தின் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.     

Wednesday, August 12, 2015

கேள்வி பதில் - 5



Dhavappudhalvan Badrinarayanan A M
     தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு  நடத்தவிருக்கும் குரூப் 1 தேர்வுகளை (TNPSC GROUP 1 EXAMS ), பகுதி பார்வை குறைபாடு  ( Visually impaired )  40% சதவீதத்திற்கு மேலுள்ளவர்கள் தேர்வு எழுத  அனுமதி உண்டாவென்பதை  தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பேராசிரியர். சகாதேவன் அவர்கள் அளித்த பதில்: 
     மத்திய அரசு வெளியிட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு முழுமையாக ஏற்று, அதனை அமுல்படுத்தும் வகையில் ஆணைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி 40% விழுக்காடு (சதவிகிதம்)   மாற்றுத்திறனுடைய அனைவரும் தமிழ்நாடு தேர்வு ஆணையத்தால் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் பங்குபெற தகுதியுடையவர்களாவர்.
எனினும் தமிழ்நாடு அரசு ஆணையம் வெளியிடுகின்ற விளம்பரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட ( Identified Post ) பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

#தமிழ்நாடு உதவிக்கரம்  மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் ''உதவிக்கரம்'' ஜூலை 2015 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு செய்திகள்

வேலை வாய்ப்பு செய்திகள் 








இன்னும் பல வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 10/08/2015 சேலம் தினத்தந்தி நாளிதழ் பக்கம் எண்: 15.






நன்றி: தினத்தந்தி சேலம் 




Thursday, July 16, 2015

இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு
வெற்றி பெற வாழ்த்துக்கள்

Www.rrbonlinereg.in

வேலை வாய்ப்பு

V.V.IMPORTANT JOB'S:plz share at lest without ignoring🙏👍

Pls keep fowarding this news until it reaches the needy:
 
FORD MOTORS hiring candidates for various post to its new plant: Free cab for pick up and drop, no agreement, permanent job.

10th, 12th - job: commercial checking, 2months training, first two month 10,000/-, from third month 12,000/-.

Any diploma - job: operator, one month training, first month 13,000/-, from second month 14,000/-.

B.Sc (C.S), BCA - job: information forwarding, computer operating, one month training, first month 15,000/-, from second month 16,000/-.

B.Com, BBA - job: Accounts and financial assistance, one month training, first month 15,500/-, from second month 17,000/-.

MBA - job: financial management, house keeping management, one month training, first month 19,000/-, from second month 22,000/-.

MCA - job: document maintenance, program editing, one month training, first month 18,000/-, from second month 21,000/-.

Contact:
90 42 233969,
 81 48 597135,
 99 44 104830.
 Contact soon and avail your perfect job.
 Forward to your all friends👬 and give them your best help.

TCS Finance team is hiring B.Com. graduates. If u know anyone, ask them to send CV to amol2.anekar@tcs.com.
 Exp: 0 to 3 yrs.

Please forward asap
 Vacancy in Mahindra Tech Accounts Receivables. & Payable Graduates & MBA fresher can apply with good knowledge of accounts. Fixed Shift 12.30 to 10.00 pm. pick drop facility. 2 days off. salary 20-25 k. Min exp 6 months. please forwrd it to ur frnds who r in search of job. contact Rohit Patil @ 9833010043
 Essar having below openings

1. Job Title - Production Supervisor
Experience - 5 to 7 years
Qualification - DME / B.E Mechanical
 CTC- 4 to 7 lac

2. Job Title- Team Leader Machine Shop
 Qualification - DME / B.E Mechanical
 Experience - 3 to 4 years
CTC - 2 to 3 lac

3. Job Title- Machine Shop In charge
 Qualification - DME / B.E Mechanical
 Experience - 5 above
 CTC - 4 to 5 lac

4. Job Title - Jr Officer Stores
Qualification - B. Com
Experience - 1 & above
CTC - 1.2 & above

5. Job Title - Engineer Design & Devpt
Qualification - DME / B.E Mechanical
 Experience - 1 to 2 years
CTC- 2.5 lac

6. Job Title - Engineer Projects
Qualification - DME / B.E Mechanical
 Experience - 3 & Above
CTC- 3 to 4 lac

 7. Job Title - Trainee Engineer Production
Qualification - DME / B.E Mechanical
 Number of opening - 5
Experience - Fresher
CTC- as per company policy

8. Job Title - Trainee Metallurgy
Qualification - Diploma Metallurgy / Bsc - chemistry
Experience - Fresher
CTC- as per company policy

9.Job Title - Officer Finance
 Qualification - MBA/ B.com
 Experience - 2 years & above
 CTC- 2.5 lac

10. Job Title - Trainee Vendor Development
Qualification - DME / B.E Mechanical
 Experience - Fresher
CTC- as per company policy

11. Job Title - CNC Operator
Qualification - DME / ITI
Number of Opening - 05
Experience - 1 to 2 years
CTC- 1.5 to 2 lac

Interedted candidates can send resumes on
jaimin.vyas@essar.com

If it is not useful to you...
 Share this in your circle, this create career to someone





 1) YES Bank of India Recruitment notification 2015
 Salary - Rs.10,000 to Rs.25,000 per month
 Qualification : Diploma, ITI, Graduates, Engineering
 More Details & Apply click here -> http://bit.ly/1u9tUne

2) Lakshmi Vilas Bank Recruitment of Probationary Officers
 Salary - 33,333 per month
 Qualification - Graduates, Engineering
 Apply click here -> http://bit.ly/1FXDEUT

3) Syndicate bank Recruitment 2015
 Qualification : 10, 12, Diploma, ITI, Grad
 Apply click here -> http://bit.ly/104wJYQ

4)Goa Shipyard Limited Recruitment 2015
 Qualification : Diploma, Graduates, Engineering
 Salary : 54,500
 Apply click here -> http://bit.ly/1tEs8IH

5)Film Television Institute of India Recruitment 2015
 Qualification : 10,12, Diploma, ITI, grad, Eng
 Total vacancy - 82 Posts
 Salary - 20,200 per month
 Apply click here -> http://bit.ly/1E4bTrS

6)Ministry of Finance Recruitment notification
 Total Vacancy - 97 posts
 Salary - 15,600 to 39,100
 Apply click here -> http://bit.ly/1zLQlBu

7)Indian Oil Corporation (IOCL) Recruitment 2015
 Qualification : 10,12, Diploma, ITI, grad, Eng
 Salary - 24,900 to 73,000 per month
 Apply click here -> http://bit.ly/10zVJbr

8) IDBI BANK Recruitment 2015
 Qualification : Graduates, Engineering
 Total vacancy - 10 posts
 Apply click here -> http://bit.ly/1thD7rA

9) HSBC India Recruitment 2015
 Qualification : Graduates, Engineering
 Salary - 15,000 to 25,000 per month
 More Details & Apply => http://bit.ly/1nPHGbT

10) Mazagon Dock Limited Recruitment Notification 2015
 Qualification : Graduates, Engineering
 Salary 51,640 per month
 Apply click here -> http://bit.ly/1wFwccJ

11) Engineers India Limited Recruitment 2015
 Qualification : Graduates, Engineering
 Salary - 50,500 Per Month
 Total Vacancy - 30 Posts
 Apply click here -> http://bit.ly/1zfcAhS

12)Indian Statistical Institute Recruitment
 Salary - 20,000 to 25,000
 Apply click here -> http://bit.ly/1xDH0pS

13)South East Central Railway Recruitment
 Salary - 20,200 per month
 Qualification : 10, 12, Diploma, ITI, Grad, Eng
 Apply click her e-> http://bit.ly/1rzd9dR

14)Subordinate Service Selection Board Recruitment
 Total Vacancy - 226
 Qualification - Graduates
 Salary - 34,800 per month
 Apply click here -> http://bit.ly/1xDw8Zc

15)United India Insurance Recruitment 2015
 Total Vacancy - 323
 Salary - 37,000 per month
 Apply click here -> http://bit.ly/1tgEqHm

16) 65,000 Vacancy for Engineers across India
 Salary - 74,200 per month
 Qualification : Diploma, Engineering
 Apply click here -> http://bit.ly/1tgVn2V

17) Air India Recruitment Notification 2015
 << 161 CABIN Crew Vacancy >>
 Salary - 31,500 per month
 Qualification : 10, 12, Diploma, ITI
 Apply click here -> http://bit.ly/1tgqWvc

18) LOK SHABA of INDIA Recruitment 2015
 Qualification : 10, 12, Diploma, Graduates
 Salary - Rs. 34,800
 More Details & Apply click here -> http://bit.ly/1xCYN0r

19) PSPCL Recruitment 2015
 Salary : Rs.16,650 to 39,100 per month
 Qualification - Eng, Grad
 Total vacancy - 204 Posts
 Apply click here -> http://bit.ly/1nOGMwa

20) Steel Authority of India recruitment Rally 2015
 Qualification : 10, 12, Diploma, ITI, Grad, Eng
 Total vacancy - 609 Posts
 Apply click here -> http://bit.ly/1sCeYqm

21) DRDO Recruitment notification 2015
 Total Vacancy - 964 posts
 Qualification - Diploma, ITI, Grad, Eng
 Apply click here -> http://bit.ly/1yH5EY2

22) Hindustan Petroleum Corporation Limited Recruitment
 2015 Qualification - Graduates, Engineering
 Total Vacancy - 107 Posts
 Apply click here -> http://bit.ly/1sy1VGw

23) SSC Southern Region Recruitment 2015
 Qualification : 10,12, Diploma, ITI, Grad, Eng
 Post - Assistant Programmer
 salary - 34,800 per month
 Apply click here -> http://bit.ly/1wD9gbW

24) Ministry of Finance Recruitment 2015
 Total Vacancy - 97 posts
 Salary - Rs. 15,600-39,100
 Apply click here -> http://bit.ly/1yG6rID

25) Konkan Railway recruitment notification 2015
 Salary - 34,800
 More details & Apply click here-> http://bit.ly/1rwDSaE

26) SBI General Insurance Recruitment 2015
 Post - Executive Managers
 Qualification - Diploma, ITI, Grad, Eng
 More Details & Apply click here -> http://bit.ly/1DUX7Dz

27) Goa Shipyard Recruitment 2015
 Salary - 16,400 to 54,500 per month
 Qualification : Diploma, Grad, Engineering, MBA, PG
 Apply click here -> http://bit.ly/1t7Xq9l

28) Syndicate Bank Recruitment notification 2015
 Qualification : 10, 12, Diploma, ITI, Grad
 Apply click here -> http://bit.ly/1v2qzRB

29) Air India Recruitment 2015
 Total Posts:- 160+2000
 Qualification:- 10th, 12th, Diploma, Graduation
 Degree

 Guys plz share it ....if u dont want employment but in india there are many frds searching for jobs

Friday, July 10, 2015

இன்றைய கேள்வி:


வெங்கடேசன்: பார்வை  குறைப்பாடு உள்ளவர்கள்  குருப் 1 தேர்வு எழுத அனுமதி உண்டா?

தவப்புதல்வன் பதில்: 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ளவர்கள், வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு, கூடுதலாக, ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிட வீதம் அவகாசம் அளிக்கப்படும். முதல் நிலை மற்றும் பிரதான தேர்வு ஆகியவற்றுக்கு, இச்சலுகை கிடைக்கும்

தகவல்: http://www.pallikudam.com/2015/06/blog-post_159.html

நன்றி: பி.ராமலிங்கம் புளியங்குடி  P.Rajalingam Puliangudi 

Thursday, July 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயண சலுகை விலை அட்டைகள்


தற்போது தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகியன ஆகும்.
சேலம் கோட்டத்திற்கு சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண சலுகை அட்டைகளை சேலம் ஜங்ஷன் (சந்திப்பு நிலையம்) கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, நேரிலும் தபால் மூலமும் அனுப்பியும் ரயில் பயண சலுகை விலை அட்டைகளைப் பெறலாம். அத்துடன் விண்ணப்பதாரர் தங்கள் மொபைல் போன் எண்ணையும் குறித்திருந்தால், எஸ்.எம்.எஸ் வசதி மூலமாக தகவலும் தெரிவிக்கப்படும்.
‪#‎மாற்றுத்திறனாளிகளுக்கு‬ சரியான தகவல்கள் எட்டாமையாலும், ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களைப் பெறுவதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்கள், சமூகநலத்துறை அலுவலகங்கள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை நிறுவனங்கள் போன்ற இடங்களில் விண்ணப்பங்களை வழங்கும் வசதியை ஏற்படுத்தி தருவதுடன், அது குறித்த தகவலை ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பங்களை வழங்க கால நிர்ணயம் செய்யக்கூடாது என தமிழகத்தின் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
‪#‎தர்மபுரி‬, ஓசூர் எந்த ரயில்வே கோட்டத்தில் வருகிறது என்பது விபரமில்லை.
திருவனந்தபுரம் கோட்டத்தில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரி நாகர்கோவில் - திருநெல்வேலி மற்றும் அந்த மாவட்டத்தை சேர்ந்த ஊர்களும் வரும். தெற்கு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள ரயில்வே நிலையங்களில் விசாரித்து தெரிந்துக் கொள்ளவும்.
அல்லது கீழ்காணும் முகவரியில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் திரு.எட்வர்ட் ஜெனி அவர்களையும் தொடர்புக் கொண்டு பயனடைலாம் என தெற்கு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949
Visit our Facebook : www.facebook.com/Kanniyakumari

Monday, July 6, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமண வாய்ப்பு



தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், 51 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.என மாநில சங்க துணைத்தலைவர் பூபதி தெரிவித்திருப்பதாவது,

51 சீர்வரிசைப் பொருட்கள், 
2 கிராம் தங்கத்தாலி,
2 மாத மளிகைப் பொருட்கள்,
மண மக்களுக்கு புத்துடைகள்,
அரசு திருமண பதிவு சான்றும் வழங்கப்படும்.     

திருமண ஜோடியில் குறைந்தது ஒருவர்  மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்,
மாற்றுத்திறனாளி அல்லாதோர்,
கணவனால் கைவிடப்பட்டோர்,
விதவை ( ஆண், பெண்)
விவாகரத்து  பெற்றோர்,
ஜாதி, மத பேதமில்லை என நினைப்போர் பங்கேற்கலாம்.

இலவச சுயவரம் ( தேர்வு) நடைப்பெறும் இடங்களும் தேதியும்:
1) ஜூலை 19ல்  - விழுப்புரம்  
2)  ஜூலை 26ல்  - திருவாரூர் 
3) ஆகஸ்ட் 16ல்  - ஈரோடு 
4) ஆகஸ்ட் 23ல்  - சென்னையில் 

திருமணம் நடைப்பெறும் இடமும் தேதியும்::
2015 டிசம்பர் 2ம் தேதி - சென்னையில் 

*திருமணத்திற்கு சட்ட திட்டங்களின்படி அரசு வழங்கும்  தாலிக்கான 4 கிராம் தங்கமும், வைப்பு நிதியும் கிடைக்கும் என நினைக்கிறேன் மற்றும் வேறு விபரங்களுக்கு, 96004 50676 மொபைல் ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

மாற்றுத்திறநாளிகளுக்கு தேசிய விருது - விண்ணப்பங்கள்




 மாற்றுத்திறநாளிகள் மறுவாழ்வுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு 14 பிரிவுகளில், மத்திய சமுக நீதித்துறை சார்பில், டிசம்பர் 3ம்  தேதி, தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான விவரங்களை www.disabilityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத்திறநாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், மாற்றுத்திறநாளிகளுக்கான மாநில ஆணையருக்கு, வரும் 10ம்  தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Sunday, March 29, 2015

கேள்வி பதில் - 4




Selvan Selva:

எனக்கு பார்வைக்குறைவு 100% சதவீதம். பி.ஏ., ஆங்கிலத்தில் (B.A.,-English ) முடித்திருக்கிறேன். அடுத்ததாக பி.எட் (B.ed. ) படிக்க நினைக்கிறேன் இலவசமாக இட ஒதுக்கீடு வாங்க முடியுமா?


Dhavappudhalvan Badrinarayanan A M:

வணக்கம் நண்பரே.  நீங்கள் பி.ஏ.வில் உயர்  மதிப்பெண்களை வாங்கியிருந்தால், அதை  வைத்து சில தனியார்  கல்லூரி நிர்வாகிகள் மனமிறங்கி, இலவச இட ஒதுக்கீடு செய்யலாம்.

சாதாரமாக பி.எட் படிப்பில் எந்த கல்லூரியில் சேர்ந்தாலும் அரசின் உத்தரவு  படி கல்வி கட்டணம் கட்ட தேவையில்லை. கல்லூரிக்கான    மற்ற கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

அரசின் சலுகைகளைப் பெறக்கூடிய தகுதியுள்ள குடும்பத்தில் ஒரு  வாரிசுக்கு, மேற்பட்டபடிப்பு வரை படிக்க அரசு உதவி உண்டு. அக்குடும்பத்தில் வேறு யாரேனும் பட்டப்படிப்பு படித்திருந்தால் அடுத்தவருக்கு இச்சலுகை  கிடையாது.

மாற்றுத்திறனாளிக்கான கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

‪#‎எம்முடைய‬ பதிலில் குறையோ தவறோ இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டி திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே

Saturday, March 28, 2015

எதுக்கெடுத்தாலும்

எதுக்கெடுத்தாலும் போராட வேண்டியிருக்கு.
‪#‎நட்டு‬ கழண்டு போகுது


ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு - மாற்றுத்திறனளிகளுக்கு

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு.


தேதி: ஜூன் 7ம் தேதி
தேர்வு நாடு முழுவதும் 50 இடங்களில் நடைப்பெறும்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவு, ஓ.பி.சி., ஓ.சி.ஐ.
பிரிவினருக்கு ரூபாய் 1000/=

எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனளிகளுக்கு 800/=

+2 தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள், தங்கள் பெயரை பதிவு செய்ய இணையதளம்:

www.jipmer.edu.in

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்

கடைசி நாள்: மே 4ம் தேதி

கட்டணம் செலுத்தும் முறை:
நெட் பேங்கிங்,
கிரிடிட்கார்டு,
டெபிட் கார்டு
மட்டுமே

மேலும் விபரங்களுக்கு:
1800 266 0371
கட்டணமில்லா எண்

செயற்கை பார்வை தரும் நவீன கருவி

செயற்கை பார்வை தரும் நவீன கருவி இந்தாண்டுக்குள் இந்தியாவில்

கேள்வி பதில் - 3




Selvan Selva


Hi friends enaku eye prblm enaku certificate la 100 % iruku..uthavi thogaikaga apply panamudiuma enaku konjam detail solringala

நண்பர்களே, எனக்கு கண் பார்வை  பிரச்சனை. சான்றிதழில் 100% சதவீதம் குறித்துள்ளனர். உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்க முடியுமா?
விபரம் தெரிந்தவர்கள் உதவ முடியுமா?


Dhavappudhalvan Badrinarayanan A M:
அன்பு selvin selva வாழ்த்துக்கள். அரசு மூலம் ஏதேனும் ஒரு உதவிதான் பெறமுடியும். உதாரணமாக மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற்றால் மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெற அனுமதியில்லை.

மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்கள் மற்ற உதவித்தொகைகளோ, கடனோ பெற முடியாது. வேலை வாய்ப்பில் பதித்து உதவித்தொகை பெறுபவர்களுக்கும் பொருந்தும்.
‪#‎ஆனால்‬ மருத்துவ காப்பிடு திட்டங்களுக்கும் உதவித்தொகை பெறுவதற்கும் சம்மந்தம் கிடையாது . உதவித்தொகை பெறுபவர்கள் மற்ற உதவி களான செயற்கை உறுப்புகள், மூன்று சக்கர சைக்கிள்கள், விழியிழந்தோருக்கான சிறப்பு கணினி, கண்கண்ணாடிகள், மடக்கு குச்சிகள், பாடங்களை கற்க டிவிடி, காது கேளாதோருக்கான செவி ஒலிக்கருவி போன்ற வேறு உதவிகள் பெறுவதற்கு எந்த தடையுமில்லை.

உதவிகள் பெற:
1) கல்வி உதவித்தொகைக்கு - பயிலும் பள்ளி , கல்லூரிகளிலேயே விண்ணப்பங்கள் கிடைக்கும்.
2) கல்வி, கடை, தொழிலுக்கான கடன்கள்: கடனுக்குரிய அளவு பொருத்தும், முறைகளை உள்ளடக்கியும் அதற்குரிய பல இடங்களில் அணுக வேண்டும்.
3) செயற்கை உறுப்புகள்: மாவட்ட சமுக நலத்துறை, மாவட்ட ஆட்சியர்.
4) மாதாந்திர உதவித்தொகை: மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமுக நலத்துறை, சமுக நலத்துறை தனி வட்டாட்சியர் ( தாசில்தார் ) வட்டாட்சியர் அலுவலகம்.

‪#‎முக்கியமாக‬ உதவிகள் பெறுவதற்கு கையூட்டு (இலஞ்சம் ) கொடுத்து பழகவும், முயற்சிக்கவும் வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

‪#‎எம்முடைய‬ பதிலில் குறையோ தவறோ இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டி திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே
 

கேள்வி பதில் - 2


Gandhi Karuppasamy
நான் பேரூராட்சி கடை ஏலத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திரனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடையை அதிக ஏலத்தொகைக்கு ஏலம் எடுத்து விட்டேன். மாற்றுத்திரனாளிகளுக்கு மானியம் கழிப்பார்கள் என்ற எண்ணத்தில். மானியம் கிடைக்குமா?முன்பணம் கட்டவேண்டுமா?தெரிந்த நண்பர்கள் ஆலோசணை கூறவும் . மேற்கொண்டு எங்கு முறையிடலாம்.

Dhavappudhalvan Badrinarayanan A M:

33 கடைகள் இருந்தால் ஒரு கடை மாற்றுத்திறனாளிக்கு கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும் . ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டியிருந்தால் ஏல கோரிக்கைப்படி ஒதுக்கப்படும். போட்டியில்லாமல் இருந்தால் பேரூராட்சி குறித்திருக்கும் குறைந்தபட்ச துகைக்கு ஒதுக்கப்படும். அதுவும் அதிகமாகப்பட்டால் பேரூராட்சி தலைவர், நிர்வாக அதிகாரியிடம் மாற்றுத்திறனாளிக்கு உரிய சான்றுகளுடன் வாடகையை குறைக்க விண்ணப்பிக்கலாம். வாடகைக்கு ஏற்றபடி முன்பணம் கட்ட வேண்டும்.
*தொழில் நடத்த பெறுகின்ற கடன்களுக்கு மட்டுமே மானியம் உண்டு. அதுவும் கடனை முறைப்படி முழுமையாக செலுத்தினால் தான்.
‪#‎எம்முடைய‬ பதிலில் குறையோ தவறோ இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டி திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே

Monday, March 23, 2015

இப்படியொரு நிலை


சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  இப்படியொரு நிலை ஏற்ப்பட்டால் என்ன சொல்வார்கள் ?


Friday, March 13, 2015

'ரிவர்சில்' இயங்கும் #மாற்றுத்திறனாளி வாகனம்:


திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி மாணவர்கள் 'ரிவர்சில்' இயங்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சிலமாற்றங்களை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் தயாரிக்கப்படுகிறது. இந்த வாகனங்களை 4 சக்கர வாகனங்களைப் போல'ரிவர்சில்' இயக்க முடியாது. குறுகிய தெருக்கள், வளைக்க முடியாத இடங்களில், இறங்கி பின்புறமாக தள்ளிச் செல்ல வேண்டும். இதுபோன்ற சமயங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க'ரிவர்சில்' இயங்கும் வாகனத்தை திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி வடிவமைத்துள்ளது. ஆட்டோமொபைல் பேராசிரியர் ராஜவேல் உதவியோடு இறுதியாண்டு மாணவர்கள் எஸ்.லோகேஷ், டி.சிவா, ஏ.ஹெர்பாட்பிலிப் வடிவமைத்துள்ளனர்.


அவர்கள் கூறியதாவது:

'ரிவர்சில்' இயக்க வசதியாக வாகனத்தின் இடதுபுறத்தில் 'கியர் பாக்ஸ்' பொருத்தினோம். இதை தனித்தனி செயின் மூலம் இன்ஜின், பின்சக்கரத்தில் இணைத்தோம். 'கியர் பாக்சில்' உள்ள கம்பியை கையால் பின்பக்கம் தள்ளிவிட்டு வாகனத்தை 'ரிவர்சில்' இயக்க முடியும், இதற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலவானது. அதிகளவில் தயாரிக்கும்போது செலவை குறைக்க முடியும், என்றனர். மாணவர்களை கல்லூரி இயக்குனர் சந்திரன், கல்லூரி முதல்வர் பழனிச்சாமி, துறைத்தலைவர் சிவக்குமார் பாராட்டினர்.


தகவல்:

http://www.dinamalar.com/news_detail.asp?id=1203839

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அதி நவீன செயற்கை உறுப்புகள்











மாநில, மத்திய, உலகளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், 'பார ஒலிம்பிக் போட்டியில் ' கலந்துக் கொள்ளும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 25 நபர்களுக்கு, நடப்பாண்டு முதல் அதி வேகமாக செயல்படத்தக்க சிறப்பு  நவீன செயற்கை உறுப்புகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஒருவருக்கு, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு  நவீன செயற்கை உறுப்புகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள்  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் அல்லது அந்தந்த மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம், தங்கள் பெயர், மற்றும் தேவையான முழு விவரங்களை தெரிவித்து பதிவு செய்துக் கொள்ளலாம்.


#முக்கியமாக இந்த  சிறப்பு  நவீன செயற்கை உறுப்புகளை உங்களுக்கு கிடைக்க உதவுகிறேன் என இலஞ்சம் கேட்டால் கொடுத்து ஏமாறவேண்டாம் என்பதையும்   அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.



Wednesday, February 25, 2015

வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை.






பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
'தேசிய வெளிநாட்டு .மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை திட்டம் ' என்ற பெயரில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இதன் கீழ் பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மருத்துவம், வர்த்தகம், கணக்கியல் மற்றும் நிதி, கலையியல், சமுக அறிவியல் மற்றும் கவின் கலை, ஆகிய பிரிவுகளின் கீழ் உயர்கல்வி மற்றும் ஆராச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புவோர், சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் விண்ணப்பிக்கலாம் என பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து தெரிவித்துள்ளார்.
நன்றி: காலைக்கதிர் சேலம்
கல்விக்கதிர் 21/02/2015

ஆசிரியர்கள் நியமனம் - மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் குளறுபடி


ஆசிரியர்கள் நியமனம் - மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் குளறுபடி 



https://www.facebook.com/photo.php?fbid=782742738474205&set=a.510172159064599.1073741825.100002154581868&type=1&theater