Saturday, March 28, 2015

கேள்வி பதில் - 2


Gandhi Karuppasamy
நான் பேரூராட்சி கடை ஏலத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திரனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடையை அதிக ஏலத்தொகைக்கு ஏலம் எடுத்து விட்டேன். மாற்றுத்திரனாளிகளுக்கு மானியம் கழிப்பார்கள் என்ற எண்ணத்தில். மானியம் கிடைக்குமா?முன்பணம் கட்டவேண்டுமா?தெரிந்த நண்பர்கள் ஆலோசணை கூறவும் . மேற்கொண்டு எங்கு முறையிடலாம்.

Dhavappudhalvan Badrinarayanan A M:

33 கடைகள் இருந்தால் ஒரு கடை மாற்றுத்திறனாளிக்கு கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும் . ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டியிருந்தால் ஏல கோரிக்கைப்படி ஒதுக்கப்படும். போட்டியில்லாமல் இருந்தால் பேரூராட்சி குறித்திருக்கும் குறைந்தபட்ச துகைக்கு ஒதுக்கப்படும். அதுவும் அதிகமாகப்பட்டால் பேரூராட்சி தலைவர், நிர்வாக அதிகாரியிடம் மாற்றுத்திறனாளிக்கு உரிய சான்றுகளுடன் வாடகையை குறைக்க விண்ணப்பிக்கலாம். வாடகைக்கு ஏற்றபடி முன்பணம் கட்ட வேண்டும்.
*தொழில் நடத்த பெறுகின்ற கடன்களுக்கு மட்டுமே மானியம் உண்டு. அதுவும் கடனை முறைப்படி முழுமையாக செலுத்தினால் தான்.
‪#‎எம்முடைய‬ பதிலில் குறையோ தவறோ இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டி திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே

No comments: