Friday, March 13, 2015

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அதி நவீன செயற்கை உறுப்புகள்











மாநில, மத்திய, உலகளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், 'பார ஒலிம்பிக் போட்டியில் ' கலந்துக் கொள்ளும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 25 நபர்களுக்கு, நடப்பாண்டு முதல் அதி வேகமாக செயல்படத்தக்க சிறப்பு  நவீன செயற்கை உறுப்புகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஒருவருக்கு, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு  நவீன செயற்கை உறுப்புகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள்  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் அல்லது அந்தந்த மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம், தங்கள் பெயர், மற்றும் தேவையான முழு விவரங்களை தெரிவித்து பதிவு செய்துக் கொள்ளலாம்.


#முக்கியமாக இந்த  சிறப்பு  நவீன செயற்கை உறுப்புகளை உங்களுக்கு கிடைக்க உதவுகிறேன் என இலஞ்சம் கேட்டால் கொடுத்து ஏமாறவேண்டாம் என்பதையும்   அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.



No comments: