வணக்கம் என் இனிய நட்புகளே...
மருத்துவ சோதனைகள் முடிந்து விட்டன.
நான் இப்ப நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்..நல்லாவே இருக்கேன்.
ஆனாலும் இன்னும் 1 1/2 ஆண்டுகளுக்கு ஒரு நாள் கூட விடாமல் அதனை எதிர்க்கும் மாத்திரை சாப்பிட வேண்டும்.
”சந்தோஷம் இது சந்தோஷம்..பொன் ஊஞ்சலில் இன்ப சங்கீதம்
வானத்தில் சிறகின்றி தனியாய் பறந்து திரியும் சந்தோஷம்..
நான் எவ்வித பாதிப்பும் இன்றி..நல்லா இருக்கேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது நண்பர்களே..
ஏன் தெரியுமா?
புற்று நோய் வந்து 3,4 ம் ஆண்டுகளில் இது நுரையீரல்/கல்லீரல்/எலும்பைத் தாக்கும்.இது இல்லாமல் இருப்பது கடினம்..
அந்த பயத்துடனே..அது மீண்டும் எப்ப வந்து தாக்குமோ என்ற அச்சத்துடனேயே புற்று நோய் சிகிச்சை முடிந்தவர்கள் இருப்பார்கள்.
எனது சில நண்பர்கள் அப்படியே இந்த உலகை விட்டு போயே போய்விட்டவர்களும் உண்டு//
அதனால்தான் எனது டாக்டர்கள் அனைவரும் do not think of negatively.. that will create problem எதுவ்ம் வராது நன்றாக இருப்பேன் என நம்பிக்கையுடன் எண்ணுங்கள் என்றனர்.
மேலும் உங்கள் தன்னம்பிக்கைதான் எங்களின் மருந்தைவிட அதிகம் உங்களிடம் செயல் புரிந்தள்ளது.
..உங்களின் இன்றைய உடல் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது உங்களின் தன்னம்பிக்கைதான்” என்றார்
"Be active at all times. Do not allow your mind to think about unnecessary fears and activities... your positive thinking will lead to improve your immunity and make a preventive measure to disease "என்று ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தினர்.
நேற்று நான் கோவை இராமகிருஷ்ணா மருத்துவ மனை சென்று வழக்கமாக 3 மாதத்துக்குப் பின் செய்யும் சோதனைகளை 5 மாதங்கள் கழித்து செய்துகொண்டேன்.
இதனால் என்னுடைய டாக்டர் கார்த்திகேஷுக்கு வருத்தம் தான்.
என்னால் என் பணிப்பளுவுடன் இணைத்து சரியான நேரத்துக்குப் போகமுடியவில்லை.
ஆனால் நேற்றைக்கு மருத்துவ சென்று 3 சோதனைகள் முடித்தாகி விட்டது. ஒன்றுதான் பாக்கி இருக்கிறது.அதுதான் Bone scan. அதனைஅடுத்த மாதம்தான் செய்ய வேண்டும்.
டாக்டர் நான் ரொம்ப நன்றாக இருக்கிறதாக physical test, abdominal scan, X-ray and mammogram எல்லாம் பார்த்து சொல்லிவிட்டார். அத்துடன் இன்னும் 6 மாதம் கழித்து வந்தால்போதும் என்றும் டாக்டர் கார்த்திகேஷ் சொன்னார்.
என்னைப் பார்த்ததில் டாக்டருக்கும் ஒரே மகிழ்ச்சி.
படத்தைப் பாருங்கள் தெரியும்.
”நீங்கள் வயதாகிவிட்டதாக எண்ணி, பணிகளை குறைக்க வேண்டாம். ஊர் சுற்றுவதை நிறுத்த் வேண்டாம். தேவையின்றி ஓய்வெடுக்க வேண்டாம். மற்றவர்கள் ரெஸ்ட் எடுங்கள் என்றாலும், உங்களால் முடிந்தால்..ஓடிக்கொண்டே இருங்கள்..அது தான் வாழ்வை நீட்டிக்கும் ஒரே காரணி ..அமிர்தம் ” என்றார்..
“வீட்டில் முடங்கி ரெஸ்ட் எடுத்தால், தானாகவே, சோர்வும், வயதான உணர்வும், பலவீனமும். ஏற்படும் ”என்றார்.
”நீங்கள் எப்போதும் போலவே இருங்கள்..யார் சொல்வதற்காகவும் பணிகளை குறைக்க வேண்டாம் ”என்றார்;
அவரும் கடின உழைப்பாளிதான்
. நேற்று காலை 9 மணிக்குபுற்று நோய் அறுவை சிகிச்சை அறைக்குச் சென்றவர் மாலை 6 .30 மணிக்குத்தான் புற நோயாளிகள் அறைக்கு வருகின்றார்.
இடையில் மதிய உணவு எடுத்துக் கொள்ளவில்லை.
ஏன் டாக்டர் இவ்வள்வு நேரம் என்று கேட்டால் ,,தொடர்ந்து காலை 9-மாலை 5.30 வரை சர்ஜரி. ”
”ஏன் டாக்டர் இடையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து மதிய உணவு சாப்பிட்டிருக்க கூடாதா? “ என்றால்,
டாக்டர் சிரித்துக் கொண்டே,, ”சர்ஜரியை கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்துவிட்டு வந்துதான் சாப்பிட வரவேண்டும் ”என்றார்..
கொஞ்சம் அமைதி, கொஞ்சம் நகைச்சுவை.. மென்மையான மருத்துவர்.
எப்போதும் உதட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிரிப்பு..படம் பாருங்கள்..தெரியும். அவரின் அறையில் எடுத்தது.
புன்முறுவல்,&சிரிப்பு..இவை..பொதுவாக மருத்துவர்களுக்கு இல்லாத சொத்து
அவரை நினைத்து நெஞசம் பெருமிதம் கொள்கிறது..
நெஞ்சு சிலிர்க்கிறது..ரொம்ப நெகிழ்வாகவும் உள்ளது.
இவரைப் போன்ற மனிதம் மிக்க டாக்டர்களால்தான் உலகம் உய்விக்க்ப்படுகின்றது.
அடுத்த படம்.. Patrina எனக்கு 4 ஆண்டுகளாக mammogram எடுக்கும் சகோதரி..
எங்களின் பின்னால் mammogram எடுக்கும் பெரிய்யய கருவி.
திருமதி.மோகனா சோமசுந்தரம் அவர்களின், தன்னம்பிக்கை ஊட்டும் மேற்கண்ட பதிவுக்கு கருத்துக்களில் சில:
: நான் இப்ப நல்லா இருக்கேன். நல்லா இருக்கேன்..நல்லாவே இருக்கேன் = மிக்க மகிழ்ச்சி அம்மா திருமதி Mohana Somasundram. எனது பக்கத்தில் பகிர்கிறேன். எல்லோருக்கும் முன்னோடி நீங்கள்.
: மகிழும் மனம் குதித்தாடுகிறது உங்களைப்போலவே தன்னலமில்லா உழைப்பின் சிகரங்கள் நூறாண்டுக்கு மேலும் வாழணும் மேம் என் கண்களும் மனமும் கலங்குகின்றன.மகிழ்ச்சியால்.முடிந்தால் நானே வ்ந்து உங்களைச் சந்தித்து ஆசிபெற எண்ணியிருக்கிறேன் மேம்.கவினுடன் உங்களைப்பார்த்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மேம்
: வானம் கைக்கெட்டும் தூரம் தான்
சமூகத்திற்கு தங்கள் பணி மேலும் தொடர பாராட்டுக்கள்....Wishing you a healthy long life
நோய் இருப்பினும் அதை நினைக்காமல் மற்றபணிகளில் உங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு வாழ்வது உண்மையில் பாராட்டுதலுக்குரியது.உங்கள் பணி தொடர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற வாழ்த்துக்கள் .