Thursday, July 11, 2013

என்ன கொடுமையடா! எப்போது உணர்ந்து திருந்துவார்களோ!!

பரிதவித்த மாற்றுத்திறனாளிகள்!

தேசிய மாற்றுத்திறனாளர் அட்டையில் டாக்டர்களின் கையெழுத்து பெறுவதற்காக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூகநலத்துறை அலுவலகத்தில், சென்ற செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1.30 வரை எந்த மருத்துவர்களும் வரவில்லை. மதியமும் ஆகிவிட்டதால், மாற்றுத்திறனாளி குழந்தைகளும், மற்றவர்களும் பசியுடன் காத்துக் கொண்டிருந்தும், அது குறித்து  சமூகநலத்துறை அலுவலர்களும் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. 

செய்தி அறிந்து பத்திரிக்கை நிருபர்கள் சென்று விசாரிக்க ஆரம்பித்ததும், அவசர அவசரமாக, டாக்டர்களை வரவழைத்து, மருத்துவ சான்று அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். - செய்தி

# என்ன  கொடுமையடா! எப்போது உணர்ந்து திருந்துவார்களோ!!





No comments: