Tuesday, August 20, 2013

வெற்றிக்கு தேவை அதிக பயிற்சியும் முனைப்பும் .







கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில், மாற்றுத் திறனாளிகளுக்கான உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் சார்பில் சரத் கயாக்வத் என்ற ஒரே ஒரு மாற்றுத் திறனாளி நீச்சல் வீரர் கலந்துக் கொண்டார்.

இவர் 200 மீ, தனி நபர் 'மெட்லே' (10வது இடம் ),  100 மீ., 'பிரஸ்ட்ஸ்டிரோக்' ( 7 வது இடம் ),    100 மீ., 'பட்டர்ஃபிளை' மற்றும் 50 மீ., ஃபிரீஸ்டைல்  ( 14 வது இடம் ) பிடித்தார்.
ஆனால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட    50 மீ., ஃபிரீஸ்டைல் ஃபைனலில் 14 வது இடம் பிடித்தது எமாற்றத்திற்குறியதாக  நாளிதழில் செய்தி வந்துள்ளது.

மேலும் சிறப்பான பயிற்சி எடுத்து வெற்றி மேல் வெற்றியடைய மாற்றுத் திறனாளி நீச்சல் வீரரான "சரத் கயாக்வத்"தை வாழ்த்துவோம்.

*நீச்சலில் விருப்பமுள்ள திறமையான மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, சிறப்பன பயிற்சியளிக்க இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை வேண்டும். ஒரு நபர் என்பதிலிருந்து திறமையான பல மாற்றுத் திறனாளி வீரர்கள் என்ற நிலை உருவாகும்.

No comments: