Friday, August 9, 2013

தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மல்டிமீடியா பயிற்சி.





1) கை,கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள்
100 நபர்களுக்கு ஒரு மாத மல்டிமீடியா பயிற்சியும்,
100 நபர்களுக்கு ஒரு மாத டிஜிட்டல் ஃபோட்டோகிராபி பயிற்ச்சியும்
இலவசமாக,தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால், சென்னையில் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 21 இலட்ச ரூபாய் ஒதுக்கி உத்தரவு இட்டுள்ளார்.

2) பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதியும், பயிற்சி உதவி தொகையாக ரூபாய் 1000/= வழங்கப்படும்.

3) பயிற்சியில் சேர தகுதி :

1) கை,கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள்
2) 16 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

4) தேவையான சான்று :
1) குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2) கல்வி தகுதி சான்று நகல்.
3) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்.
4) பெயர், முகவரி, தொலைபேசி எண், கல்வித்தகுதி, மாற்றுத்திறன் தன்மை, சதவித அளவு மற்றும் விடுதி தேவையா என்ற விபரங்களை தெளிவாக எழுதி மேற்காணும் சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

5) அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகர்களுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
6) கடைசி நாள்: இம்மாதம் (ஆகஸ்ட் ) 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

** குறுகிய காலமே இருப்பதால் இச்செய்தியை வாசித்ததும், மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் சென்று சேர உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
உங்கள்
-தவப்புதல்வன்.

No comments: