Sunday, February 17, 2013

‘பிராக்டிக்கல்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு.



மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறை தேர்வர்களுக்கும் 10ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது என தமிழகப்பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணை: 
10ம் வகுப்பு தேர்வை, தனித்தேர்வாக எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறை தேர்வர்களுக்கும் அறிவியல் செய்முறைத்தேர்வில் விலக்கு அளித்து,   எழுத்துத் தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, அவர்கள் பெறும் மதிப்பெண்களை 100க்கு மாற்றி, வேறுப்பாட்டை, செய்முறை மதிப்பெண்களாக வழங்கலாம் என கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்து.
இந்த நிலையில் 75 மதிப்பெண்களுக்கு, 44 மதிப்பெண்களுக்கு,  அதிகமாக பெறும் தேர்வர்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதபடும். மற்றவர்கள் செய்முறைத்தேர்வில் தோல்வி அடைந்த்தாக கருதபடும். இது போன்ற நடைமுறை சிக்கல்களை களைய, செய்முறைத்தேர்வினையே ரத்து செய்ய கருத்துரை அரசுக்கு  கல்வித்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பொதுத்தேர்வை,எழுதிய தேர்வர்களுக்கு, எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் பதிந்து சான்றிதழ் வழங்கவும், செய்முறைத்தேர்வுக்கு விலக்கு அளிக்கவும்  இயக்குனர் அனுமதி கோரியுள்ளார். இயக்குனரின் கருத்துருவை பரிசீலனை செய்த அரசு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறை தேர்வர்களுக்கும் விலக்கு அளித்து உத்தரவிடுகிறது.
மேலும் கடந்த ஆண்டு ஏப்ரலில், பங்கேற்ற தேர்வர்களுக்கு, புதிய முறையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்க அரசு   உத்தரவிட்டுள்ளது. செய்முறைத்தேர்வில் இருந்து விலக்கு கோரும் தேர்வர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்களுடன், தேர்வுத்துறை இயக்குனருக்கு  விண்ணப்பித்தால், செய்முறைத்தேர்வுக்கு விலக்கு அளிக்க இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது சந்தேகங்கள் மற்றும் வேண்டுகோள்:
!) தனித்தேர்வாக எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமா? பள்ளியில் பயிலும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகையில்லையா?
2) சரியான விளக்கம் அரசாணையில் இல்லையா அல்லது செய்தி வெளியிட்ட நாளிதழில் விடுபட்டு விட்டதா? தெளிவு செய்யப்பட வேண்டும். ஏனென்றல் கல்வி அதிகாரிகளும் சரியான விளக்கமின்மையால் தவறான முடிவெடுக்க்க் கூடிய நிலையும், மாற்றுத்திறனாளிகளுக்கிடையே பேதத்தையும், தாழ்வு மானப்பான்மையையும் ஏற்படுத்திவிடும்.
3) மேலும் விரும்புகின்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் செய்முறைத்தேர்வுக்கு விலக்கு அளிக்க  அரசு   உத்தரவிட்ட வேண்டுமென தமிழக மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

No comments: