பெயர் பதிவு செய்துக் கொள்ள அழைப்பு.
சேலம் மாவட்ட உதவிகரம் நல்வாழ்வு சங்கம், மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.
மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இலவச திருமணம் செய்துக் கொள்ள விரும்பினால், அவர்களில் யாராவது ஒருவர் மாற்றுதிறனாளியாக இருக்க வேண்டும். இவர்களுக்கு திருமணத்தின் போது பட்டுப்புடவை, பட்டுவேஷ்டி, தாலி (திருமாங்கல்யம்), மற்றும் சீர்வரிசைகள் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும்.
இலவச திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் மாற்றுதிறனாளிகள் வருகின்ற 2013, பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் சேலம் ஐந்து ரோடுக்கு அருகில் இருக்கின்ற கலைமகள் தெரு, சிவாம்பிகா பஸ் அலுவலக வளாகத்தில் உள்ள சேலம் மாவட்ட உதவிகரம் மாற்றுதிறனாளர் நல்வாழ்வு சங்க அலுவலகத்தில் பெயர் பதிவு செய்துக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 0427- 6503858 / 97891 78568 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாமென தெரிவித்துக் கொள்கிறார்கள்.
2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்துக் கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் தங்கள் இணைகளை (ஜோடிகளை) தேர்ந்தெடுத்துக் கொண்டு பதிவு செய்துக் கொள்வதுடன் கடைசி நேர சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படங்கள் சென்ற வருடம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண விழா புகைப்படங்கள். கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.
மேலும் விபரங்களுக்கு 0427- 6503858 / 97891 78568 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாமென தெரிவித்துக் கொள்கிறார்கள்.
2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்துக் கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் தங்கள் இணைகளை (ஜோடிகளை) தேர்ந்தெடுத்துக் கொண்டு பதிவு செய்துக் கொள்வதுடன் கடைசி நேர சிரமங்களை தவிர்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படங்கள் சென்ற வருடம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண விழா புகைப்படங்கள். கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.
No comments:
Post a Comment