Sunday, February 3, 2013

மாற்றுத்திறனாளியின் 42 ஆண்டு போராட்டம்

மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், வதோல் கிராமத்தை சேர்ந்த, வாய் பேச முடியாத, காது கேளாத 52 வயதான மாற்றுத்திறனாளி திலீப் பலராம். 10 வயது சிறுவனாக இருந்த போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இவர் மீது, லாரி மோதி, அவரது இடது கால் நசுங்கிப் போனது. மருத்துவமனையில் இடது கால் அகற்றப் பட்டு, முடமாகிப் போன திலீப் 13 ஆண்டுகளுக்கு பின்  ரூபாய் 2 இலட்சத்து 70 ஆயிரம் நிவாரணம் கோரி, 1983ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.



இதற்கிடையில் திலீப் சார்பாக ஆஜரான வக்கீல் பிரதீக் ஆச்சாரியா, 1990ம் ஆண்டு மரணமடைந்தார். லாரியின் உரிமையாளர் ஷாம் சிங்கும் இறந்து போனார். இதையடுத்து,  ஷாம் சிங்கின் மகங்கள் சந்தோக் சிங், ஹாம் சிங் ஆகியோர் வழக்கின் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர்.

பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்ட இருவரும், இன்ஷூரன்ஸ் கம்பெனி பிரதினிதியும் ஆஜராகாததால், அவர்களுக்கு எதிராக நேற்று முந்தினம் (1/2/2013) 42 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து தொடர்பாக, மோட்டார் வாகன விபத்து நிவாரண தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட  திலீப்புக்கு ரூபாய் 1 இலட்சத்து 69 ஆயிரம் நிவாரணத் தொகையை, 1983ம் ஆண்டு முதல் 6 சதவீத வட்டியுடன் சேர்த்துத் தர வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நெடிய போரட்டத்துக்கு பின் நிவாரணத் தொகைக்கான தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும் காலதாமதமாகமல் நிவாரணத் தொகை அவருக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

No comments: