விழியிழந்த வாலிபரை கைபிடித்து தேர்வெழுத அழைத்து வந்த கால்இழந்த பட்டதாரி மாணவர்
:டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல்நிலை தேர்வில், பங்கேற்க வந்த, பார்வை இல்லாத மாணவரை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் அழைத்து வந்தது, மனித நேயத்தை மலரச் செய்வதாக இருந்தது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1, முதல்நிலை தேர்வு, காரைக்குடியில், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, இன்ஜி., கல்லூரியில் நேற்று நடந்தது. இன்ஜி., கல்லூரியில் 400 பேரில், 250 பேரும், அரசு கலை கல்லூரியில் 347 பேரில் 181 பேரும் தேர்வு எழுத வந்து இருந்தனர். மேற்பார்வையாளர்களாக முதன்மை கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், வைரவன் செயல்பட்டனர். தேர்வெழுத வந்திருந்த விழியிழந்த பி.எட்., மாணவர் முத்துக்குமாரை, அவரது நண்பரும், கால் இழந்த மாற்றுத்திறனாளி மாணவருமான கே.ராஜா, தனது மூன்று சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.
முத்துக்குமார் கூறுகையில், ""சாதாரண விவசாய குடும்பத்தில், பிறந்த நான், இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன் என்றால், என் தாய், தந்தையரும், நண்பர்களுமே காரணம். தற்போது, அழகப்பா கல்லூரியில், பி.எட்., படித்து வருகிறேன். பாடங்களை "பிரெய்லி' முறையிலும், மாணவர்கள் சொல்வதை கேட்டும், சி.டி.,க்கள் வாயிலாகவும் படித்து வருகிறேன். கண்டிப்பாக இத்தேர்வில்,வெற்றி பெறுவேன். பார்வை இழந்த எனக்கு பார்வையாக இருப்பவர்கள் என் நண்பர்கள், என்றார்.
கே.ராஜா,மாற்றுத்திறனாளி: முத்துக்குமார் நன்கு படிப்பார். நான் மட்டுமல்ல, என்னுடன் பயிலும் அத்தனை மாணவர்களும், முத்துக் குமாருக்கு உதவி செய்வோம். எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.
:டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல்நிலை தேர்வில், பங்கேற்க வந்த, பார்வை இல்லாத மாணவரை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் அழைத்து வந்தது, மனித நேயத்தை மலரச் செய்வதாக இருந்தது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1, முதல்நிலை தேர்வு, காரைக்குடியில், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, இன்ஜி., கல்லூரியில் நேற்று நடந்தது. இன்ஜி., கல்லூரியில் 400 பேரில், 250 பேரும், அரசு கலை கல்லூரியில் 347 பேரில் 181 பேரும் தேர்வு எழுத வந்து இருந்தனர். மேற்பார்வையாளர்களாக முதன்மை கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், வைரவன் செயல்பட்டனர். தேர்வெழுத வந்திருந்த விழியிழந்த பி.எட்., மாணவர் முத்துக்குமாரை, அவரது நண்பரும், கால் இழந்த மாற்றுத்திறனாளி மாணவருமான கே.ராஜா, தனது மூன்று சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.
முத்துக்குமார் கூறுகையில், ""சாதாரண விவசாய குடும்பத்தில், பிறந்த நான், இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன் என்றால், என் தாய், தந்தையரும், நண்பர்களுமே காரணம். தற்போது, அழகப்பா கல்லூரியில், பி.எட்., படித்து வருகிறேன். பாடங்களை "பிரெய்லி' முறையிலும், மாணவர்கள் சொல்வதை கேட்டும், சி.டி.,க்கள் வாயிலாகவும் படித்து வருகிறேன். கண்டிப்பாக இத்தேர்வில்,வெற்றி பெறுவேன். பார்வை இழந்த எனக்கு பார்வையாக இருப்பவர்கள் என் நண்பர்கள், என்றார்.
கே.ராஜா,மாற்றுத்திறனாளி: முத்துக்குமார் நன்கு படிப்பார். நான் மட்டுமல்ல, என்னுடன் பயிலும் அத்தனை மாணவர்களும், முத்துக் குமாருக்கு உதவி செய்வோம். எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.
நண்பர்களின் பயணம் தொடர்ந்து நட்புறவுடன், வாழ்வும் வெற்றிகரமாக அமைய எமது மனபூர்வமான வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment