Monday, March 18, 2013

சோதனைகளைத் தாண்டிய சாதனை



தமிழ்நாடு கோயமுத்தூர் பல்லாடம் சுல்தான்பேட்டையை சேர்ந்த சங்கர் சுப்ரமணியம். வயது 26. இவர் பிறவியிலேயே 90% சதவீத பார்வைக் குறைப்பாடுடன், இரண்டு கால்களும் வளர்ச்சியின்மையால் நடக்கவும் முடியாதவர்.
எனினும் எந்த விசயத்தையும் எளிதில் மறந்து விடாத ஞாபக சக்தியும் உள்ளவர். அதைவிட மேலாக சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதியை  கொண்டவர். இதுவே சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றியுள்ளது. மாற்றியும் வருகிறது.
பாடப்புத்தகங்களை வாசிக்காமலேயே, பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை அப்படியே மனத்தில் பதியவைத்தே, தேர்வில் சாதித்து காட்டியுள்ளார்.



தற்போது சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ. பொருளாதாரம் பட்டப்படிப்பில் முதன்மை இட்த்தைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கவர்னர் ரோசையா    தங்கப்பதக்கம் வழ்ங்கி சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார்.
“பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதே, எனது இலட்சியம்” என்கிறார் சங்கர் சுப்ரமணியம்.
மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற அனைவருக்கும் ஊக்கமளிக்கும் உந்து சக்தியாக விளங்கும் சங்கர் சுப்ரமணியத்தை பற்றி பதிவிடுவதில் மகிழ்வும் ஆனந்தமும், மகிழ்வும் அடைகிறோம். அவரது இலட்சியம் யாவும் வெற்றிப்[ பெறவும், செய்த, செய்ய போகும் சாதனைகளுக்காகவும் அவரை வாழ்த்துவோம்.


1 comment:

vetha (kovaikkavi) said...

Eniya Nalvaalththu....Evarukku..
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com