Wednesday, April 24, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு சேலத்தில் வாய்ப்பு



இரண்டு கைக|ளும் நல்ல நிலையில் உள்ள, செவிதிறன் குறைந்த மற்றும் வாய் பேசயியலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, சுயத்தொழில் புரிய உதவும் வகையில், விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், சேலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பாண்டு வழங்கப்பட உள்ளது.
தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகள் வரும் 30ம் தேதிக்குள் [2013 ஏப்ரல் 30ம் தேதிக்குள் ] சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்திள் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் நடராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.
·      நண்பர்களே! சேலம் மாவட்டத்தில் தெரிந்த இரண்டு கைக|ளும் நல்ல நிலையில் உள்ள, செவிதிறன் குறைந்த மற்றும் வாய் பேசயியலாத மாற்றுத்திறனாளிகள் யாரெனும் இருப்பின், அவர்களுக்கு உடன் தகவல் தந்து பயனடைய செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சேவையில்,
தவப்புதல்வன்.

No comments: