Saturday, June 22, 2013

மாற்றுத்திறனாளி ஊழியர் அதிரடி கைது.

இன்றொரு தகவல்....

மாற்றுத்திறனாளி  ஊழியர் அதிரடி கைது.

மாற்றுத் திறனுடையோனே! இலஞ்சம் கொடுத்து வேலைப் பெற்றாலும், இலஞ்சம் வாங்காமல், உன் திறமையை பணியில் காட்டு.  இலஞ்சம் வாங்கினால் தான் செலவழித்ததை திரும்ப ஈட்ட முடியுமேன்ற நிலையிருப்பின்,  வேண்டாமே அப்படிப்பட்ட வேலை.. இலஞ்சம் வாங்கி நீயும் அவமானப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தாதே.

# வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் பணி புரிந்து, மரணமடைந்து விட்ட, நகராட்சி ஊழியரின் வீட்டு மனைப்பட்டாவை பெயர் மாற்றம் செய்து தருவதற்கு,   அரக்கோணம் நகராட்சி நகரமைப்பு அலுவலராக பணியாற்றிய மாற்றுத் திறனாளியான குமாரவேல் (50) இலஞ்சம் பெறுகையில், இலஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  - செய்தி.

No comments: